Posts

Showing posts from July, 2021

வாரன் பஃபெட் பொன்மொழிகள்

வாரன் பஃபெட் பொன்மொழிகள் 1. I made my first investment at age eleven . I was wasting my life up until then . நான் என்னுடைய பதினோராம் வயதில் எனது முதல் முதலீட்டை மேற்கொண்டேன் . அது வரை எனது வாழ்க்கையை நான் வீணடித்து விட்டேன் .   2. It's not necessary to do extraordinary things to get extraordinary results . அசாதாரணமான பலன்களைப் பெறுவதற்கு அசாதாரணமான செயல்களைச் செய்ய வேண்டுமென்று அவசியமில்லை .  3. My idea of group discussion is to look at the mirror . குழு விவாதம் குறித்த என்னுடைய பார்வை கண்ணாடியைப் பார்ப்பது மட்டுமே . 4. There is a huge difference between the business that grows and requires lots of capital to do so and the business that grows and doesn't require capital . விரிவாக்கம் அடைவதற்கு முதல் தேவைப்படும் வியாபாரத்திற்கும் முதல் தேவைப்படாத வியாபாரத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது .  5. Can you really explain to a fish what it is like to walk on land ? One day on land is worth a thousand years talking about it . மீன் ஒன்றுக்கு நிலத்தில் நடப்பது எப்படி என்று உங்கள...

ஜென் கதைகள் - 1

ஜென் கதைகள் - 1 1. மனம் போல் வாழ்வு பங்குச்சந்தையில் தேர்ச்சி பெற்ற ஒரு ஜென் குருவிடம் இரண்டு NRI முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆலோசனை கேட்பதன் பொருட்டு வந்திருந்தனர். முதலாமவர் இந்த மாதிரி எங்கள் நாட்டு பங்குச்சந்தையில் எப்போது பார்த்தாலும் ஒரே கூச்சலும் குழப்பமும் தான். எல்லோரும் குறுகிய கால இலாபத்திற்காக ஒருவரையொருவர் தோற்கடிக்கத் துடிக்கின்றனர். IPO என்பது பட்டியல் இலாபத்திற்கு (listing gain) என்பதாக உருமாற்றம் பெற்று விட்டது. இல்லாத பங்குகளை விற்று விட்டு (short selling) இலாபம் பார்க்க நினைக்கிறார்கள். முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் கால அளவு மென்மேலும் குறைந்த வண்ணமாகவே இருக்கிறது. Buy & Hold என்பதே கிடையாது. எல்லாமே F & O தான். அது சூதாடிகளின் கூடாரமேயன்றி வேறில்லை. உங்கள் நாட்டுப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று யோசனை. உங்கள் சந்தை எப்படி ? குரு பின்வருமாறு பதில் சொன்னார். எங்கள் சந்தையும் உங்கள் நாட்டு சந்தை மாதிரி தான். இங்கும் எப்போதும் ஒரே கூச்சலும் குழப்பமும் தான். இரண்டாமவர் எங்கள் நாட்டு பங்குச்சந்தை ஒரு சிறந்த ...

பங்குச்சந்தை அகராதி

பங்குச்சந்தை அகராதி முக மதிப்பு (Face Value)  பங்குகளின் முக மதிப்பு பொதுவாக 10 ரூபாய் என்ற அளவில் இருக்கும். ஒரு நிறுவனத்தின் பங்கு சார்ந்த முதல் (Equity Capital) 100000 ரூபாய் என்று கொண்டால் 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட 10000 பங்குகள் என்பதாகப் பொருள் கொள்ளலாம். இந்த முக மதிப்பிற்குத் தான் நிறுவனம் பங்காதாயம் (dividend) உள்ளிட்ட அனைத்துப் பலன்களையும் வழங்கும். ஒரு பங்குச் சம்பாத்தியம் (Earnings Per Share - EPS) ஒரு இலட்சம் ரூபாய் பங்கு சார் முதல் கொண்ட நிறுவனம் ஒன்று 20000 ரூபாய் நிகர இலாபம் ஈட்டுவதாகக் கொள்ளலாம். ஒரு பங்குச் சம்பாத்தியம் என்பது இந்த நிகர இலாபத்தை மொத்தப் பங்குகளால் வகுத்தால் கிடைத்து விடும். EPS = Net profit ÷ Total No of shares =2 ரூபாய். பங்காதாயம் (Dividend) நிறுவனம் ஒரு பங்குச் சம்பாத்தியமாக 2 ரூபாய் ஈட்டுகிறது என்று பார்த்தோம். இந்த இரண்டு ரூபாய் முழுவதையும் நிறுவனம் பங்காதாயமாக வழங்கி விடாது. ஒரு ரூபாய் பங்காதாயத்தை வழங்கி விட்டு மீதி ஒரு ரூபாயை வளர்ச்சி மற்றும் தினசரி செலவுகளுக்குப் (CAPEX என்று சுருக்கமாக அழைக்கப்படும் capital expenditure மற்...

பங்குக்கதை - 2

பங்குக்கதை - 2 இ ந்தக் கதையைத் தனியாகப் படித்தாலும் புரியும். ஆனால் இது பங்குக் கதை - 1  ன் தொடர்ச்சி. பங்குக்கதை - 1 ஐ படித்து விட்டு இதைப் படித்தால் சுவை பெருகும். இந்தக் கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல) பங்குத் தரகர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ஆடிட்டர் மகனுக்கு உலகமே பளிச்சென்று அலம்பி விட்டது போல் இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல மூன்று கோடி. ஒரு கோடிக்கு எத்தனை பூஜ்யம்?  அப்பா ரொம்பவும் அமுக்குளி என்று அம்மா சொல்வது உண்மை தான். அவருடைய மின்னணுக் கணக்கில் (Demat Account) மூன்று கோடி ரூபாயை வைத்துக் கொண்டு ஒன்றும் தெரியாத அப்பாவி போல் இருக்க எப்படி முடிந்தது? எள்ளுக்குள் எண்ணெய் மாதிரி இருக்கவேண்டும் என்று அடிக்கடி அவர் சொல்வதன் அர்த்தம் இது தானா? எண்ணெய் இருந்தால் பரவாயில்லை. ஒரு எண்ணெய்க் கிணறே அல்லவா வைத்திருந்திருக்கிறார்? ஆடிட்டர் மகன் இந்த விஷயத்தில் அப்பாவுக்கு நேரெதிர். கையில் பத்து காசு இருந்தால் பதறி விடுவார்.  தரகர் மிகவும் தெளிவாகச் சொல்லி விட்டார். ITC நிறுவனமே தனது வியாபாரத்தைப் பன்மயமாக்கம் (Diversificatio...

முதல் வரலாறு - 2

முதல் வரலாறு - 2 ஒரு தட்டச்சு நிறுவனம் 10000 ரூபாய் முதலீட்டில்  தொடங்கப் பெறுகிறது. 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட 1000 பங்குகள். இது தான் நிறுவனத்தின் பங்கு சார்ந்த முதல் (Equity Capital) நிறுவனம் தனிப்பட்ட ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நிறுவனம் நல்ல கேந்திரமான ஒரு இடத்தில் அமையப் பெற்றிருக்கிறது. முதலாளி திரு.KKV அவர்கள் இன்முகத்துடன் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறார். ஒரேயொரு தட்டச்சு இயந்திரத்துடன் தொடங்கப்பட்ட KKV நிறுவனத்தில் இப்போது பத்து தட்டச்சு இயந்திரங்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாது இயங்குகின்றன. பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள். நிறுவனத்திற்குக் கடன் சார்ந்த முதல் (Debt Capital) எதுவும் இல்லை. திருவாளர் KKV அவர்களுக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை கடன். தட்டச்சு நிறுவனம் அவருக்குச் சொந்தமான இடத்தில் இயங்குவதால் வாடகை எதுவும் கிடையாது. மேலும் நிறுவன இயந்திரங்கள் உட்பட அனைத்துத் தளவாடங்களும் நிறுவன இலாபத்தில் (Internal accruals) வாங்கப்பட்டவை. நிறுவனத்தின் தற்போதைய நிகர இலாபம் 100000 ரூபாய். ஒரு பங்கிற்கான நிகர வருவாய் 100 ரூபாய். அதாவது 10 ரூபாய் முக ம...

முதல் வரலாறு - 1

முதல் வரலாறு - 1 இருப்பு நிலைக் கணக்கில் (Balance Sheet) முதலாவது மற்றும் முக்கியமானது முதல் என்று அழைக்கப்படும் Capital.  'முதல்'களில் இரண்டு வகை உண்டு. பங்கு சார் முதல் (Equity Capital) மற்றும் கடன் சார் முதல் (Debt Capital) இந்த இரண்டு விதமான ' முதல்' களையும் சமன் செய்து நிறுவனத்தை நடத்துவது வெறும் கணக்கு மட்டுமல்ல. அது ஒரு கலை.  ஒரு கேள்வி. பங்கு சார் முதல் மலிவானதா அல்லது கடன் சார் முதல் மலிவானதா? பங்கு சார் முதலுக்கு நிறுவனம் வட்டி கட்ட வேண்டியதில்லை. இலாபம் ஈட்டினால் மட்டும் பங்காதாயம் (Dividend) வழங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் பங்காதாயம் வழங்குவது நிறுவனத்தின் விருப்பத்தைப் பொறுத்தது. பங்காதாயம் வழங்காமல் வேறு முதலீட்டு வாய்ப்புகளை நிறுவனம் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், நிறுவனம் இலாபம் ஈட்டுகிறதோ இல்லையோ கடன் சார் முதலுக்கு கட்டாயம் வட்டி கட்டியாக வேண்டும். அதனால் பங்கு சார் முதல் கிட்டத்தட்ட இலவசம் என்றே சொல்லலாம். சரியா? தவறு.  பங்கு சார் முதல் என்பது மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று. நிறுவனம் ஒன்றின் 10 ரூபாய் முக மதிப்பு உள்ள ஒரு பங்கு எப்படி மதிப...

ஒரு அதிர்ஷ்டக் கதை

ஒரு அதிர்ஷ்டக் கதை Charles Darrow ஜெர்மனியின் பென்சில்வேனியா நகரில் வசித்து வந்த 42 வயது heating engineer . 1930 களின் ஆகப்பெரிய பொருளாதார நெருக்கடியின் (Great Depression) போது நிலையான வேலையில்லாமல் அவருடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது . Charles Darrow அவ்வப்போது பங்குச்சந்தையில் ஊக வணிகம் செய்து பணம் சம்பாதிக்க முயல்வது வழக்கம் . அந்தப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வறுமையின் கோரப்பிடியில் இருந்த Darrow விற்கு பங்குச்சந்தை ஊக வணிகங்களில் இதை இவ்விதம் செய்திருந்தால் எவ்விதம் இருந்திருக்கும் அதை அவ்விதம் செய்திருந்தால் எவ்விதம் இருந்திருக்கும் என்ற கற்பனைகளில் திளைப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்காக இருந்தது . உதாரணமாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனப்பங்குகள் 40 டாலர் என்ற அளவுக்குத் தரையைத் தட்டும் வரை காத்திராமல் 1000 டாலர் என்ற அளவில் விற்று விட்டு வெளியேறியிருந்தால் எப்படி இருந்திருக்கும் ? அந்தப் பணத்தை  நிலத்தில் முதலீடு செய்திருந்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கப் பெற்றிருக்கும் என்பதான ஒருபோதும் முடிவு பெறாத ஆகாயக் கோட்டைகள் ... அந்தப் பொருளாதார நெருக்கடி நிலையிலும் ரி...

குறுகிய வழி

குறுகிய வழி நண்பர் ஒருவர் ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஒரு சிலர்    தினசரி வணிகம்  ,  ரூபாய் பங்கு முதலீடுகள்  மற்றும் பெறுதிகள் (F & O) வாயிலாகத் தொடர்ச்சியாகப் பணம் ஈட்டிய வண்ணம் இருக்கிறார்களே, அதைக் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதாகக் கேட்டார்.  ஒரு சிலர் என்பதில் ஒரு திருத்தம். ரொம்பவும் அபூர்வமான மிக ஒரு சிலர். Richard Lustig என்பவர் 7 முறை லாட்டரியில் மிகப்பெரிய பரிசுகளை வென்றிருக்கிறார். Learn how to increase your chances of winning the lottery என்று புத்தகம் கூட எழுதியிருக்கிறார். இப்படி ஒரு சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். இது விதிவிலக்கான மிகவும் சிறுபான்மை. நாம் பெரும்பான்மையைத் தான் கணக்கில் கொள்ள வேண்டும்.  தினசரி வர்த்தகம் மூலமாகவோ அல்லது ரூபாய் பங்கு முதலீடு மற்றும் பெறுதிகள் மூலமாகவோ பணம் ஈட்டி உலகப் பணக்காரர்கள் வரிசையில் யாரும் இடம் பெறவில்லை. பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குதாரர் என்ற அடிப்படையில் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அதே மாதிரி மதிப்பு முதலீட்டின் மூலம...

மாயமான் வேட்டை

மாயமான் வேட்டை நண்பர் ஒருவரின் கேள்வி. காய்கறி வியாபாரம் செய்பவர் காலை 500 ரூபாய் உடன் சந்தைக்கு வருகிறார். காய்கறிகளைக் கொள்முதல் செய்கிறார். மாலைக்குள் தெருத்தெருவாகச் சுற்றிக் காய்கறிகளை விற்று விடுகிறார். அதில் ஒரு இலாபம் கிடைக்கப் பெறுகிறது. இது தான் அவருடைய தினசரி நடைமுறை. அல்லது தட்டச்சு அலுவலகம் ஒன்றைப் பாருங்கள். அங்கு ஆதாரமாக என்ன நடக்கிறது? காலையில் பூஜ்யத்தில் தொடங்கும் அந்த அலுவலகத்தில் மாலைக்குள் குறைந்த பட்சமாக 500 ரூபாய் சம்பாதிக்கலாம். இதே மாதிரி பங்குச்சந்தையில் ஏன் சம்பாதிக்க முடியாது? காலையில் பங்குகளை வாங்க வேண்டியது, மாலைக்குள் விற்று விட்டு ஏன் இலாபம் பார்க்க முடியாது? அல்லது பங்குத் தரகு நிறுவனங்கள் சொல்வது மாதிரி குறுகிய கால அளவில் இலக்கு விலை வைத்து ஏன் இலாபம் சம்பாதிக்கக் கூடாது? சுருக்கமாகச் சொல்வதென்றால் பங்குச்சந்தையில் ஏன் தினசரி மற்றும் குறுகிய கால வணிகம் செய்யக்கூடாது? ஏனென்றால் பங்குச்சந்தை தினசரி மற்றும் குறுகிய கால அளவுகளில் சீரற்ற நடை (random walk)  தான் பயிலும். அதுவும் தினசரி வணிகம் பூவா தலையா என்ற அடிப்படையில் தான் நகரும். தினசரி பத்து வர்த்...

காப்பீடு முதலீடு அல்ல

காப்பீடு முதலீடு அல்ல Insurance is not Investment முதலீடு செய்வதற்கு முன்பாகக் காப்பீடு எடுத்துக் கொள்வது மிக முக்கியம். நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்து, காலப்போக்கில், உலகின் எட்டாவது அதிசயம் என்று அழைக்கப்படும் கூட்டு வட்டியின் மூலமாக முதலீட்டுப் பெருக்கத்தை அடைந்து உங்களுக்கே உங்களுக்காக ஒரு சேமிப்புக் கருவூலத்தை உருவாக்குவது ஒரு வகை. காப்பீட்டில் அடிப்படையாக என்ன நிகழ்கிறதென்றால் , நீங்கள் ஐம்பது இலட்சத்திற்குக் காப்பீடு எடுத்துக் கொண்டால், உடனடியாக, அடுத்த கணமே நீங்கள் ஐம்பது இலட்சத்திற்கான சேமிப்புக் கருவூலத்தை உருவாக்கிக் கொண்டதாக அர்த்தம். நாம் இல்லாத போது நம் வாரிசுகளுக்குத் தான் அந்தப் பணம் கிடைக்கும் என்றாலும் காப்பீட்டின் பொருள் என்பது இது தான்.  காப்பீட்டைக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது. மனித வாழ்க்கை மதிப்பு (Human Life Value) என்று சொல்வார்கள். அதைக் கணக்கிட்டு சரியான தொகைக்குக் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும்.  குறைந்த முனைமத் தொகைக்கு (Premium) அதிகபட்சக் காப்பீடு எடுத்துக் கொள்வதும் மிக முக்கியம். அந்த அடிப்படையில் பார்த்தால் வரையறுக்...

சந்தைக்குள் சந்தை

சந்தைக்குள் சந்தை நவராத்திரி கொலு கண்காட்சியில் ஒரு பொம்மை என் கருத்தைக் கவர்ந்தது. ஒரு பொம்மை. அதை மேல் கீழாக இரண்டாகப் பிரித்தால் அதற்குள் இன்னொரு பொம்மை. இவ்வாறாக பொம்மைக்குள் பொம்மையாக மொத்தம் ஆறு பொம்மைகள். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பங்குச்சந்தையையும் இவ்வாறு சந்தைக்குள் சந்தை என்பதாகப் பிரித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. காளைச்சந்தையை மூன்று விதமாகப் பிரிக்கலாம். காளைச்சந்தை, மிகை காளைச்சந்தை மற்றும் மீமிகை காளைச்சந்தை. அதே மாதிரி மூன்று விதமான கரடிச்சந்தைகள்... கரடி, மிகை கரடி, மற்றும் மீமிகை கரடி. இந்த ஆறு விதமான சந்தைகளையும் பல்வேறு விதமாகக் கையாண்டு பணம் சம்பாதிக்கலாம். மீமிகை கரடிச்சந்தையில் பங்குகளை வாங்கி மீமிகை காளைச்சந்தையில் விற்பது ஒரு வகை. மீமிகை கரடிச்சந்தையில் பங்குகளை வாங்கி மிகை கரடிச்சந்தையில் விற்பது மற்றொரு வகை.  இவ்வாறு அடுத்தடுத்த சந்தைகளில் (மீமிகை கரடி- மிகை கரடி- கரடி- காளை- மிகை காளை- மீமிகை காளை) விற்பது குறுகிய கால வணிகம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு தனிப்பட்ட சந்தையின் சின்னச்சின்ன விலை வித்தியாசங்களைப் பணமாக்கம் செய்வது தின வணிகம் . ...

புத்தகம் பேசுது

புத்தகம் பேசுது 1. ஒரு புத்தகத்தைப் படிக்கையில் தனிமை என்பதே கிடையாது Susan Wiggs 2. ஒரு சிறுவர்களுக்கான கதை, சிறுவர்கள் மட்டுமே படித்துச் சுவைக்கும் படி எழுதப்பட்டிருந்தால், அது ஒரு நல்ல, சிறுவர்களுக்கான கதை அல்ல C S Lewis 3. புத்தகம் படிப்பது ஒரு சிறந்த பொழுதுபோக்கு. விளம்பர இடைவேளை கிடையாது. திடீரென்று மின்கலம் (battery) தீர்ந்து விடாது. கொடுக்கும் காசுக்கு முழு மதிப்பு Stephen King 4. நல்ல புத்தகங்கள் தனது எல்லா இரகசியங்களையும் ஒரே சமயத்தில் சொல்லி விடாது Stephen King 5. புத்தகங்களை எரிப்பதை விட சில மோசமான குற்றங்கள் இருக்கின்றன. புத்தகங்களைப் படிக்காமல் இருப்பது அவற்றில் ஒன்று Joseph Brodsky 6. புத்தகங்கள் கண்ணாடி போன்றவை. உங்களுக்குள் உள்ளதையே அது பிரதிபலிக்கும் Carlos Ruiz Zafou 7. சொர்க்கம் என்பது ஒரு விதமான நூலகம் என்பதாகவே நான் எண்ணுகிறேன் Jorge Luis Borges 8. புத்தகம் படிப்பது என்பது தனிமைத்தீவில் இருந்து கொண்டு பிறருடன் தொடர்பு கொள்வதான ஒரு அதிசய நிகழ்வு M Proust 9. எல்லோரும் படிக்கும் புத்தகங்களையே நாமும் படித்துக் கொண்டிருந்தால் எல்லோரின் சிந்தனை மாதிரியே தான் நம் சிந்தனை...

பங்கு (ஓய்வு) ஊதியம்

பங்கு (ஓய்வு) ஊதியம் குடும்ப மருத்துவர், ஓய்வூதியம் பெறுவதற்கு நல்ல திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதாகக் கேட்டார்.  ஓய்வூதியம் பெறும் வகையில் பரஸ்பர நிதித் திட்டங்கள் மற்றும் எல்ஐசி யின் annuity திட்டங்கள் இருக்கின்றன என்றாலும் நல்ல நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது தான் ஒரு சரியான தீர்வாக இருக்க முடியும். பங்குகள் என்ன சர்வரோக நிவாரணியா? கையில் சுத்தியல் இருந்தால் எதைப் பார்த்தாலும் ஆணியாகத் தான் தெரியும். எதற்கெடுத்தாலும் டங் (பங்)கென்று மண்டையில் அடிக்கிறீர்களே என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள். ஓய்வூதியம் என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் ஒரு கண்காட்சிப் பொருளாக மாற உள்ளது. அதற்கு demographic dividend (இதைப்பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்) உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இப்போது அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. தனியார் துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் மருத்துவர், பொறியாளர் போன்ற தொழில் சார் ஊழியர்கள் (professional) அவர்களுக்கான ஓய்வூதியத்தை அவர்களே கட்டமைத்துக் கொள்ள வேண்டிய ஒரு காலச் சூழல். பங்குச்சந்தை முதலீடுகளின் மூலமாக ஓய்வூதிய...