Posts

Showing posts from April, 2025

பங்கு கேள்வி பதில் - 8

பங்கு கேள்வி பதில் - 8 கேள்வி : பங்கு முதலீடுகளில் Consistency க்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்? பதில் : நிறுவனப்பங்கு ஒன்றின் ஒரு பங்குச் சம்பாத்தியம் (EPS) 100 ரூபாய் என்று கொள்ளலாம். நிறுவனம் ஆண்டாண்டு ஒரே சீராக 15 சதவீதக் கூட்டுப்பெருக்கம் என்ற அளவில் நிகர இலாபம் ஈட்டுவதாகக் கொள்ளலாம். அதன் EPS ஆண்டுக் கணக்கில் ரூ.115, 132, 151, 173, 198 ... என்றவாக்கில் வளர்ந்து வரும். இன்னொரு நிறுவனம் முதல் நான்கு ஆண்டுகளில் 20 சதவீதம் கூட்டுப் பெருக்கம் மற்றும் ஐந்தாவது ஆண்டு 20 சதவீத எதிர்மப் பெருக்கத்திற்கு உள்ளாவதாகவும் கொள்ளலாம். அதன் EPS ரூ.120, 144, 165, 198, 159 ... என்றவாக்கில் வளர்ந்து வரும். முதல் நிறுவனம் குறைவான சதவீதத்தில் வளர்ந்து வந்தாலும் அதன் சீர்மை நிறை (consistency) காரணமாகக் கூடுதல் வருமானத்தை ஈட்டுவதாக இருக்கும். சந்தை இந்த ஒரே சீரான வருமானத்திற்கு அதிக விலை வருவாய் விகிதத்தை வழங்கும். Pidilite Industries பங்கு உயர் PE விகிதங்களில் வர்த்தகமாவதற்கு அதன் consistency முக்கியமான காரணம். கேள்வி : Infosys நிறுவனம் இன்றைய தேதியில் 19856 bagger. ஆனால் TCS வெறும் இத்தனை 32 bagger மட...

கல்லிலே கலை வண்ணம் கண்டான் ...

கல்லிலே கலை வண்ணம் கண்டான் ... (Michelangelo- மணி மொழிகள்) 1. It is well with me only I have a chicel in my hand. கையில் உளி ஒன்று இருந்தால் அது மட்டும் எனக்குப் போதும். 2. Every block of stone has a statue inside it and it is the task of the sculptor to discover it. கல்லிலே கலை வண்ணம் காண்பதே சிற்பியின் வேலை. 3. The marble not yet carved can hold the form of every thought the greatest artist has. செதுக்கப்படாத பளிங்குக்கல் கலைஞனின் ஒவ்வொரு எண்ணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.  4. The more the marble wastes, the more the statue grows. எவ்வளவுக்கு எவ்வளவு பளிங்கு கரைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சிலை வளர்கிறது. 5. I saw the angel in the marble and carved until I set her free. பளிங்குக்கல்லில் அந்த தேவதை கட்டுண்டு கிடப்பதை நான் கண்டேன், பின்னர் அந்தக் கல்லைச் செதுக்கி அவளை விடுவித்தேன். 6. A man paints with his brains and not with his hands. ஒரு மனிதன் மூளையைக் கொண்டு வண்ணம் தீட்டுகிறான், கைகளைக் கொண்டு அல்ல. 7. It is necessary to keep one's compass in one's eyes and not in the hand, ...

பங்குச்சந்தை பதில்கள்- 16

பங்குச்சந்தை பதில்கள்- 16 கேள்வி: உலகப் பங்குச்சந்தைகளின் எதிர்காலப் போக்கு என்னவாக இருக்கும் என்று கணிக்க முடியுமா? பதில்: இன்றைய சூழ்நிலையில் மட்டுமல்ல, எந்த சூழ்நிலையிலும் பொருந்துவதான ஒரே கணிப்பு: எதிர்பாராததை எதிர்பாருங்கள்! கேள்வி: ஒரு காளைச்சந்தையில் முதலீட்டு வெளிச்சத்தில் இருக்கும் சில துறைகள் அடுத்த காளைச்சந்தையில் பங்கேற்காது என்பது உண்மையா? எனில் அத்தகைய துறை சார்ந்த நிறுவனப்பங்குகளை விற்று விட வேண்டுமா? பதில்: பங்குச்சந்தை முதலீடுகளில் வெற்றி பெற உடைமை மனப்பான்மை (ownership mentality) கொள்வது அடிப்படையான ஒன்று. வாகன உதிரி பாகங்கள் (Auto ancillary) துறை முதலீட்டு வெளிச்சத்தில் இருக்காது என்று Samvardhana Motherson International நிறுவனர் அதன் பங்குகளை விற்று விடுவாரா? Samvardhana Motherson International (Formerly Motherson Sumi Systems) நிறுவனப்பங்குகள் அதன் IPO விலிருந்து நாளது தேதி வரை 30 சதவீத CAGR கொடுத்திருப்பது இங்கே கவனம் பெறுகிறது.  கேள்வி : ஒருவர் தனது வருமானத்தில் எத்தனை சதவீதம் சேமிக்க வேண்டும்? பதில் : (பங்கு) முதலீடுகள் மூலமாக நமக்குக் கிடைக்கப்பெறும் வர...

மனிதத்தின் கூர்மதி

மனிதத்தின் கூர்மதி Human Ingenuity  The stock market is the only place where anyone can invest in human ingenuity- Ben Carlson  மனிதத்தின் கூர்மதியில் யாவரும் முதலீடு செய்யக் கூடியதான ஒரே இடம் பங்குச்சந்தை.     *               *                   *   பங்குச்சந்தை என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணம் இருக்கலாம். அடிப்படையான ஒரு சிந்தனை என்ற அளவில் பங்குச்சந்தை என்பது பங்குகளை வாங்க மற்றும் விற்பதற்கான இடம் என்று ஒரு சிலர் நினைக்கலாம். இன்னொரு பக்கம் அது செல்வ உருவாக்கத்திற்கான ஒரு தளம் என்பதாக சிலர் நினைக்கலாம். அது சூதாட்டத்திற்கான இடம் என்று சிலர் நினைக்கலாம். ஒரு சிலர் அம்பானியின் சொத்து மதிப்பே தின அளவில் இலட்சம் கோடி நஷ்டத்திற்கு உள்ளாகிறது என்று அஞ்சியவர்களாக முதலீட்டை மேற்கொள்ளாமல் இருக்கலாம். அதற்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. எனில், பங்குச்சந்தை என்பது உண்மையில் என்ன? பங்குச்சந்தை என்பதை மனிதத்தின் கூர்மதியில் யாவரும...