Posts

Showing posts from June, 2022

நலம் தரும் புறக்கணிப்பு - 2

நலம் தரும் புறக்கணிப்பு - 2 Benign Neglect - 2 ஒரு முறை பங்குச்சந்தை ஜென் குருவிடம் சிஷ்யர்கள் , ' நலம் தரும் புறக்கணிப்பு என்ற ஒரு கருத்தாக்கத்தை அடிக்கடி கூறுகிறீர்கள் . உண்மையில் இந்த நலம் தரும் புறக்கணிப்பு என்பது என்ன ? புறக்கணிப்பு என்பது எப்படி நலம் தரும் ? சற்று விளக்கமாக எடுத்துரையுங்கள் ' என்று கேட்டுக் கொண்டனர் .  ' நலம் தரும் புறக்கணிப்பு என்பது பட்டினத்தார் பாடியது மாதிரி தூங்காமல் தூங்கி சுகம் பெறுவதாகும் . தூங்காமல் தூங்குவது எங்ஙனம் என்பதாக ஒரு கேள்வி எழுவது இயற்கை . பங்குச்சந்தையை நீங்கள் பார்க்காமல் பார்க்க வேண்டும் ' சிஷ்யர்களின் தலை சுற்றத் தொடங்கியதைக் கவனித்தவராக ஜென் குரு புன்சிரிப்புடன் தொடர்ந்தார் .  ' ஒரு சமயம் மதிப்பு முதலீட்டாளர் ஒருவர் திபெத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்று வந்தார் . இந்த சுற்றுலா கொஞ்சம் வித்தியாசமானது . இதன் காலம் ஆறு ஆண்டுகளாகும் . மேலும் இந்தக் கால கட்டத்தில் நீங்கள் வெளி உலகுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாது . நமது மதிப்பு முதலீட்டாளர் தனது டீமேட் கணக்கை ஆறப் போட்டு ( freeze) விட்டு திபெத்திற்குச் சென்று வ...

காண்டேகர் - மணி மொழிகள்

காண்டேகர் - மணி மொழிகள் 1. வாழ்க்கை என்பது பூஞ்சோலை அல்ல . அது போர்க்களம் . இந்தப் போர்க்களத்தில் எதிரிகளோடு மட்டும் போராடினால் போதாது . நண்பர்களுக்கு எதிராகவும் வாளை உருவவேண்டும் . இது மட்டுமல்ல . சமயம் வந்தால் நம்மோடு நாமே போராட வேண்டும் . நம்மோடு நாமே போராடுவது , நம்மை நாமே தோற்கடிப்பது ! இவையெல்லாம் விந்தையாகத் தானே இருக்கின்றன ? விந்தை மட்டுமல்ல , உண்மையுங் கூடத்தான் . ஆதிசேஷனுக்கு ஆயிரம் தலைகள் இருப்பதாகப் புராணம் கூறுகிறது . அது போல மனிதனுக்கு ஆயிரம் மனங்கள் இருக்கின்றன . 2. அன்பு செலுத்துவது என்றால் மலரோடு விளையாடுவது என்று தான் நினைத்திருந்தேன் . அது மல்லிகையாக இல்லாவிட்டாலும் ரோஜாவாக இருக்கும் ; ஒரு சமயம் ரோஜாவின் முள் பட்டுக் கையில் இரத்தம் வரலாம் என்பதற்கு மேல் என் கற்பனை ஓடியதில்லை . இன்று நான் தெரிந்து கொண்டேன் . அன்பு செலுத்துவது என்றால் நெருப்போடு விளையாடுவது . 3. மனிதன் தோன்றிய புதிதில் தன் உணர்ச்சிகளை ஸ்பரிசத்தினால் தான் வெளியிட்டிருப்பான் என்று தோன்றுகிறது . நூறு வார்த்தைகளால் சொல்ல முடியாத விஷயத்தை ஒரு சாதாரண ஸ்பரிசம் தெரிவித்து விடுகிறது . இன்னமும் கூடத்தான் . ம...

ஒரு கேள்வி ஒரு பதில் - 2

ஒரு கேள்வி ஒரு பதில் - 2 கேள்வி : உள்ளார்ந்த மதிப்பை (Intrinsic value) முதலீட்டிற்கு எப்படிப் பயன்படுத்துவது ? உள்ளார்ந்த மதிப்பைக் கணக்கீடு செய்த பின்னர் அந்த மதிப்பிற்குக் குறைவாகப் பங்குகள் வர்த்தகமாகும் போது அவற்றை வாங்கி அந்த மதிப்பிற்கு அதிகமாகப் பங்குகள் வர்த்தகமாகும் போது விற்று விடுவது சிறந்ததா ? அல்லது அத்தகைய பங்குகளை இனங்கண்டு வாங்கி அவற்றைக் காலா காலத்துக்கும் வைத்திருப்பது நல்லதா ? பதில் :   உள்ளார்ந்த மதிப்பு குறித்து ஏற்கெனவே பார்த்திருக்கிறோம் . உள்ளார்ந்த மதிப்பு என்பது ஒரு தனிப்பட்ட எண் அல்ல . Range of values என்ற அடிப்படையில் அது ஒரு மதிப்புப் பட்டையில் ( value band ) இருக்கும் .  ஒரு நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பு ரூ.2127.32 என்று கணிப்பதெல்லாம்  உட்டாலக்கடி . உள்ளார்ந்த மதிப்பு , பங்குகளின் சந்தை மதிப்பைப் போல் தின அளவில் மாறாது என்றாலும் அதுவும் அவ்வப்போது மாறிய வண்ணமாகவே இருக்கும் . நிறுவனத்தின் ஒரு வியாபார உத்தி , அது மேற்கொள்ளும் விரிவாக்கம் , அதன் கையகம் , புதிய காப்புரிமைகள் போன்ற ஒவ்வொரு தரவுகளும் அதன் உள்ளார்ந்த மதிப்பை நேர்மமாகவோ அ...

இயற்கை மொழிகள்

இயற்கை மொழிகள் Nature Quotes 1. Nature does not hurry , yet everything is accomplished - Lao Tzu இயற்கை எதற்கும் விரைவு கொள்வதில்லை . ஆனால் எல்லாமே அடைந்து விடப்படுகின்றன . 2. Look deep into nature , and then you will understand everything better - Albert Einstein இயற்கையை உற்று நோக்குங்கள் . பிறகு எல்லாவற்றையும் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள் . 3. We don't inherit the earth from our ancestors , we borrow it from our children - American Proverb இந்த பூமி என்பது நமது மூதாதையர்களிடமிருந்து நாம் பெற்ற பரம்பரைச் சொத்து அல்ல . மாறாக நமது குழந்தைகளிடமிருந்து நாம் கடனாகப் பெற்றது மட்டுமே . 4. There is something infinitely healing in the repeated refrains of nature - the assurance that dawn comes after night and spring after winter - Rachel Carson இரவுக்குப் பின்னதான விடியல் , குளிர் காலத்திற்குப் பின்னதான வசந்த காலம் என்று இயற்கை பாடும் பல்லவியில்  எல்லையற்றதான ஒரு கருணை நிரம்பி வழிகிறது . 5. Preserve and cherish the pale blue dot , the only home we've ever known - Carl Sagan நமக்குத்...