கணிதம் உங்களை எவ்விதம் காப்பாற்றும் ?
கணிதம் உங்களை எவ்விதம் காப்பாற்றும் ? பங்குச்சந்தையில் முதலீடு செய்ய algebra என்று அழைக்கப்படும் சாதாரண இயற்கணிதம் மட்டும் தெரிந்திருந்தால் சிறப்பு . சிக்கலான டெரிவேடிவ் கணக்குகள் தெரியாமல் இருப்பது இன்னும் சிறப்பு . நிறையப் பேர் பங்குச்சந்தை குறித்துப் பாராமுகமாக இருப்பதற்கான அடிப்படையான காரணம் கூட்டுப் பெருக்கம் குறித்த சரியான புரிதல் இல்லாமையே என்பதாகத் தோன்றுகிறது . 0.1 சதவீத CAGR வேறுபாடு கூட ஆண்டாண்டுகளின் கணக்கில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தவல்லது . அதே மாதிரி பணவீக்கம் குறித்த புரிதல் . முதலீட்டில் பணவீக்கத்தைக் கழித்த கணக்கீடுகள் மிகவும் அடிப்படையானவை . அதற்கான சமன்பாடு : உண்மையான வருமானம் = வருமானம் - பணவீக்கம் . வருமானம் 7 சதவீதம் . பணவீக்கம் 7 சதவீதம் . எனில் உண்மையான வருமானம் பூஜ்யம் . உங்கள் முதலீடுகள் உண்மையான வருமானம் ஈட்ட பணவீக்கத்தை வெல்வதாக அவை இருக்கவேண்டும் . வெறுமனே வென்றால் மட்டும் போதாது . பணவீக்கத்தின் மடங்குகளில் வெல்ல வேண்டும் . அதற்குப் பங்குச்சந்தை முதலீடுகள் தான் ஒரே வழி . சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு என்பதாகத் தொலைக்காட்சியில் breaking news போடு...