Posts

Showing posts from June, 2025

வாழ்க்கை மொழிகள் - 6

வாழ்க்கை மொழிகள்- 6 1. Try to be a rainbow in someone else's cloud- Maya Angelou அடுத்தவர்களின் வாழ்க்கை என்கிற மேகத்தில் ஒரு வானவில்லாக இருக்க முயற்சி செய்யுங்கள். 2. When you look back on your life, it looks as though it were a plot but when you are into it, it's like a mess: just one surprise after another. Then later, you see it was perfect- Schopenhaner உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழும் அது கூச்சலும் குழப்பமுமாகவே இருக்கும். பின்னர் அதனைத் திரும்பிப் பார்க்கையில் அது சீரான ஒன்றாக இருக்கும். அதன் அனைத்துப் புள்ளிகளும் ஒரு கோலமாக இணையும். 3. Don’t ask, What do I want from life? Ask a different set of questions: What does life want from me? What are my circumstances calling me to do? - David Brooks வாழ்க்கையிலிருந்து நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்ற கேள்வியைக் கேட்காதீர்கள். வாழ்க்கை என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்ற கேள்வியைக் கேளுங்கள். அதன் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அறைகூவல் என்ன என்று ஆராயுங்கள். 4. Life does not ask what we want. It presents us with options- Thomas ...

குறியீட்டு விலக்க முதலீடு

குறியீட்டு விலக்க முதலீடு Deindex Investing சென்செக்ஸ் முதலான குறியீடுகளில் புதிதாக இணையவிருக்கும் நிறுவனப்பங்குகளை அவற்றின் இணைவிற்கு முன்னரே இனங்காண முடியுமா என்பது நண்பர் ஒருவரின் கேள்வி. முதலிலேயே அத்தகைய பங்குகளை வாங்கி வைத்திருந்தால் பின்னர் சென்செக்ஸை அடித்தொடரும் குறியீட்டு நிதிகள் அவற்றை வாங்கும் போது நாம் விற்று விடலாம் அல்லது அவற்றின் தொடர்ந்தவாக்கிலான இலாபப் பயணத்தில் பங்கு பெறலாம் என்பது அவரின் எண்ணப்போக்காக இருந்தது.  சென்செக்ஸ் குறியீட்டில் இணைவதற்கு அவை பெரு நிறுவனப்பங்குகளாக (large cap stocks) இருக்க வேண்டும். தரமான இருப்பு நிலைக் கணக்கையும் (balance sheet) திடமான நிதி விகிதங்களையும் (financial ratios) அவை கொண்டிருக்க வேண்டும். நீர்மை நிறை (liquidity) மிகவும் முக்கியம். இவை போக சென்செக்ஸில் ஏற்கெனவே இடம் பெற்ற துறைகளை அவை சிறப்பு செய்வதாக (compliment) இருக்க வேண்டும். இத்தகைய பங்குகளை முன்னரே இனங்காண்பது முடியாதது என்பதற்கு அடுத்தது. மேற்கண்ட விதிமுறைகளில் அவை பெரு நிறுவனப்பங்குகளாக இருக்கவேண்டும் என்ற விதிமுறை  இத்தகைய பங்குகளை முன்னரே இனங்கண்டு, அது முடியாதெ...