Posts

Showing posts from April, 2023

திட்டமிடப்படாத விளைவுகள்

திட்டமிடப்படாத விளைவுகள் Unintended Consequences குழந்தைகள் காப்பகம் ஒன்றில் ஒரு சிறிய பிரச்னை எழுந்தது . மாலை ஆறு மணிக்கு காப்பகம் மூடப்படும் . ஆனால் ஒரு பத்து சதவீதம் பெற்றோர்கள் மாலை ஆறரை , ஏழு என்று வந்த வண்ணம் இருந்தார்கள் . இவர்களைச் சரியான நேரத்திற்கு வரவழைக்கும் பொருட்டு காப்பகத்திற்குத் தாமதமாக வரும் பெற்றோர்களுக்கு அபராதம் விதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது . ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் அபராதம் விதிப்பது என்று முடிவெடுக்கப்பட்ட பின்னர் தாமதமாக வரும் பெற்றோர்களின் சதவீதம் அதிகரிக்கத் தொடங்கியது . அபராதம் விதிக்காத போது தாமதமாக வரும் பெற்றோர்களுக்கு ஒரு குற்ற உணர்வு இருந்தது . அந்தக் குற்ற உணர்வுக்கு அபராத வடிவில் ஒரு விலை நிர்ணயம் செய்த பிறகு பெற்றோர்களின் குற்ற உணர்வு குறையத் தொடங்கியது . விளைவாக தாமதமாக வரும் பெற்றோர்கள் அதிகரிக்கத் தொடங்கினர் . இது unintended consequences என்பதாக அழைக்கப்படுகிறது . கார் ஓட்டுதல் என்பது இப்போது ஆபத்தில்லாத பயண முறையாக மாறி விட்டது . குண்டும் குழியும் இல்லாத நெடுஞ்சாலைகள் , மிதித்தால் டக்கென்று பிடிக்கும் நிறுத்தி (brake) இருக்கைப் பட்டை...

வேகம் விவேகம் அல்ல .

வேகம் விவேகம் அல்ல . ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் எங்கள் வியாபாரத்தில் பங்குதாரர் ஆகலாம் . நிலம் , பல்பொருள் அங்காடி , காப்பீடு , தங்கம் , உணவகம் ... என்று 18 வகையான தொழில்களில் முதலீடு செய்கிறோம் என்று வகையாக முதலீட்டாளர்களை (?) ஏமாற்றியிருக்கிறது ஒரு நிறுவனம் . ஒரு இலட்சம் ரூபாய்க்கு எங்கள் நிறுவனப்பங்குகளை வாங்கினால் மாதம் 10000 ரூபாய் இலாபப் பங்கீடு தருகிறோம் , இரண்டு ஆண்டுகளில் உங்கள் ஒரு இலட்சம் ரூபாயைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லி 161 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறது . முதலில் இந்த மாதிரி தனிப்பட்ட எவரும் இவ்வளவு எண்ணிக்கையில் பங்குகளை வெளியிட முடியாது . பங்கு வெளியீட்டுக்கென்று ஏகப்பட்ட சட்ட திட்டங்கள் இருக்கின்றன . இம்மாதிரி வருமானம் தரக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் (ஒருவேளை) இருந்தால் அதனை யாரும் யாருடனும்  பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள் . இன்னொன்று 18 வகையான வியாபாரங்களில் ஈடுபடுவதற்கான அவர்களின் தகுதி என்ன என்பதைப் பார்க்க வேண்டும் . எனக்கென்னவோ அவர்கள் ஒரேயொரு வியாபாரத்தை மட்டும் செவ்வனே செய்வதாகத் தோன்றுகிறது . அது முதலீடு செய்பவர்களை ...

பங்கு கேள்வி பதில் - 3

பங்கு கேள்வி பதில் - 3 கேள்வி : ROCE அதிகமாகவும் , PE விகிதம் குறைவாகவும் உள்ள பங்கு ஒன்றைப் பரிந்துரைக்க முடியுமா ? பதில் : Coal India . கேள்வி : இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கு இன்றைய தேதியில் ஒரு மல்டிபேக்கர் என்பதெல்லாம் சரி , ஆண்டாண்டாக இவ்வாறு ஒரு நிறுவனப் பங்கை விற்காமல் வைத்திருப்பது சாத்தியமாகக்கூடிய ஒரு நிகழ்வா ? பதில் : பெரும்பாலும் சாத்தியமில்லை . சாத்தியமானால் அதன் மதிப்புப் பெருக்க சாத்தியக்கூறுகள் அனேகம் . இந்த இடத்தில் ஒரு தகவலைக் கூற விழைகிறேன் . அமெரிக்க ஆய்வு ஒன்றின் படி பணமாக்கம் செய்யப்படாத இறந்த முதலீட்டாளர்களின் பங்குத் தொகுப்புகள் சிறப்பாகச் செயல்படுகின்றனவாம் . கேள்வி : பங்கு முதலீட்டு வருமானங்கள் ஆளாளுக்கு மாறுமா ? பதில் : இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கு ஒரு மல்டிபேக்கர் . அதனால் இலாபம் பெற்றவர்களைத் தவிர நஷ்டம் அடைந்தவர்கள் எவருமிலர் . சரியா ? தவறு . இன்ஃபோசிஸ் பங்கை 2000 ஆவது ஆண்டில் அதன் உச்ச விலையில் வாங்கியவர்கள் , இலாபம் மற்றும் நஷ்டம் இல்லாத நிலையை (breakeven point) அடையப் பல்லாண்டுகள் ஆனது . 2000 ல் வாங்கி பின்னர் தொடர்ந்து Average down (பங்குகளின் விலை...

பங்குப் பிரிப்பு

பங்குப் பிரிப்பு  Stock Split Eicher Motors நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் தனது 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்கை 1 ரூபாயாகப் பிரிக்க உள்ளதாக அறிவித்ததும் 14000 ரூபாய் என்ற அளவுகளில் வர்த்தமாகிக் கொண்டிருந்த அந்த நிறுவனப் பங்குகளின் விலை ஜிவ்வென்று உயரத் தொடங்கியது .  உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சுலபமான வழி அதனை இரண்டாக மடித்து சட்டைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள் என்ற பணமொழி ஞாபகத்திற்கு வந்தது . அது சரி , இந்தப் பங்குப் பிரிப்பு என்றால் என்ன ? நிறுவனங்கள் ஏன் பங்குகளைப் பிரிக்க வேண்டும் ? பங்குகளைப் பிரிக்காமல் ஒரு நிறுவனம் ஏன் வர்த்தகமாகக் கூடாது ?  நிறுவனம் ஒன்றின் பங்கு முதல் (share capital) 10000 ரூபாய் என்று கொள்ளலாம் . அதாவது 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட 1000 பங்குகள் . நிறுவனத்தின் முதல் வருட நிகர இலாபம் (net profit) 2000 ரூபாய் . நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியம் (Earnings Per Share) 2 ரூபாய் . நிறுவனம் 20 என்ற விலை வருவாய் விகிதத்தில் ( PE Multiple) வர்த்தமாகிறது . அதாவது பங்கின் விலை 40 ரூபாய் . ஆண்டாண்டு காலமாக நிறுவனம் நன்கு செயல்படுகிறது . நிறுவனத்தின் ந...

பங்கு தன் வரலாறு கூறுதல் - 2

பங்கு தன் வரலாறு கூறுதல் - 2 நான் ... அதைப்பற்றி அப்புறம் ... இது என்னுடைய சுருக்கமான கதை . நான் ஏன் இந்தக் கதையைச் சொல்ல ஆசைப்படுகிறேன் ? என் கதை யாருக்கேனும் பாடமாக இருக்கும் என்பதாக நான் நினைக்கிறேனா ? கதையைப் படித்து யாரேனும் தங்களை மாற்றிக் கொள்வார்களா என்ன ? முதலில் அதைப் படிக்கவேனும் செய்வார்களா ? மனிதர்களின் கவன ஈர்ப்பு நேரம் (attention span) கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . பிறகு எதற்காக இந்தக் கதை ? தெருவோரம் நடந்து செல்லும் போது தரையோடு தரையாகப் பூத்திருக்கும் சின்னஞ்சிறிய பூக்களைப் பார்த்திருக்கிறீர்களா ? இத்தினியூண்டு இருக்கும் அந்தப் பூவில் இயற்கை எவ்வளவு நகாசு வேலைகளைச் செய்திருக்கிறது ? எந்த அழகிய பெண்ணின் கூந்தலையாவது அது அலங்கரிக்கப் போகிறதா ? அல்லது ஆண்டவனுக்கு அதனை மாலையாகக் கட்டி யாராவது சூடப் போகிறார்களா ? இவை எதுவும் நடக்கப் போவதில்லை . அது பூக்கிறது . பூப்பது அதன் இயல்பு . பூக்காமல் அதனால் இருக்க முடியாது . 1993 ஆம் ஆண்டு நாங்கள் பிறந்தோம் . நாங்கள் மொத்தம் 1976100 பேர் . அதற்கு முன்னால் எங்கள் நிறுவனர்களின் எண...