காண்டேகர் - மணி மொழிகள்

காண்டேகர் - மணி மொழிகள்

1. வாழ்க்கை என்பது பூஞ்சோலை அல்ல . அது போர்க்களம் . இந்தப் போர்க்களத்தில் எதிரிகளோடு மட்டும் போராடினால் போதாது . நண்பர்களுக்கு எதிராகவும் வாளை உருவவேண்டும் . இது மட்டுமல்ல . சமயம் வந்தால் நம்மோடு நாமே போராட வேண்டும் . நம்மோடு நாமே போராடுவது , நம்மை நாமே தோற்கடிப்பது ! இவையெல்லாம் விந்தையாகத் தானே இருக்கின்றன ? விந்தை மட்டுமல்ல , உண்மையுங் கூடத்தான் . ஆதிசேஷனுக்கு ஆயிரம் தலைகள் இருப்பதாகப் புராணம் கூறுகிறது . அது போல மனிதனுக்கு ஆயிரம் மனங்கள் இருக்கின்றன .

2. அன்பு செலுத்துவது என்றால் மலரோடு விளையாடுவது என்று தான் நினைத்திருந்தேன் . அது மல்லிகையாக இல்லாவிட்டாலும் ரோஜாவாக இருக்கும் ; ஒரு சமயம் ரோஜாவின் முள் பட்டுக் கையில் இரத்தம் வரலாம் என்பதற்கு மேல் என் கற்பனை ஓடியதில்லை . இன்று நான் தெரிந்து கொண்டேன் . அன்பு செலுத்துவது என்றால் நெருப்போடு விளையாடுவது .

3. மனிதன் தோன்றிய புதிதில் தன் உணர்ச்சிகளை ஸ்பரிசத்தினால் தான் வெளியிட்டிருப்பான் என்று தோன்றுகிறது . நூறு வார்த்தைகளால் சொல்ல முடியாத விஷயத்தை ஒரு சாதாரண ஸ்பரிசம் தெரிவித்து விடுகிறது . இன்னமும் கூடத்தான் . மனிதன் பேச்சிலே இவ்வளவு வல்லாளன் ஆன பிறகும் கூடத்தான் .

4. வாழ்க்கை என்பது ஊஞ்சலில் ஊசலாடுவது அல்ல ; அது புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது .

5. விதி ஒரு போக்கிரிப் பையனைப் போன்றது . மனிதர்களின் அழகிய எண்ணங்களை அழித்து நாசம் செய்வதில் அதற்கு ஆனந்தம் .

6. பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது . மனதின் ஈரமும் வேண்டும் .

7. வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய காரியம் மற்றவர்களை முன்னேறிச் செல்வதல்ல ‌. நம்மை விட நாமே முன்னேறிச் செல்வது தான் .

8. எரிமலையின் வெளிப்புறத்தில் திராட்சைக்கொடிகள் படர்ந்திருந்தாலும் அதனுள்ளே நெருப்பு கனன்று கொண்டிருக்கும் . வாழ்க்கையும் அது போன்றது தான் . வெளி உலகத்துக்குத் துளியும் தெரியாத எண்ணற்ற இன்பமும் கனவும் நம்பிக்கையும் மனிதனுடைய மனத்தகத்தே மலர்கின்றன . அளவிலாத் துன்பமும் ஏமாற்றமும் அவன் உள்ளத்தை எரிக்கின்றன .

9. வாழ்க்கை எப்போதுமே குறை உள்ளதாகத் தான் இருக்கிறது . அப்படி அது இருப்பதில் தான் அதன் இனிமை நிரம்பியிருக்கிறது .

10.மனிதன் ஆயுள் முழுவதும் கனவுகளால் வாழ்கிறான் . அது மட்டுமல்ல ; சாவின் மடியிலுங் கூட புத்தம் புதிய கனவுகளில் ஆழ்ந்து அவன் தூங்கி விடுகிறான் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14