பங்குச்சந்தை பதில்கள் - 15
பங்குச்சந்தை பதில்கள் - 15
கேள்வி: இந்தியப் பங்குச்சந்தை தனது அடுத்த உயர்வை எப்போது துவங்கும்?
பதில்: யாமறியேன் பராபரமே!
கேள்வி: ஏன் F & O வேண்டாம் என்கிறீர்கள்?
பதில்: செல்வம் சேர்ப்பது முக்கியம். மனநிம்மதியுடன் செல்வம் சேர்ப்பது அதைவிட முக்கியம்.
கேள்வி: Gold மற்றும் Real estate முதலீடுகளில் பெரும்பாலோனோர் பெறும் ஆதாயத்தைப் பங்குச்சந்தையில் ஏன் பெறமுடிவதில்லை?
பதில்: தங்கம் மற்றும் நிலத்தை இது எங்கள் பாட்டியின் நகை இது எங்கள் பாட்டனார் நிலம் என்று தலைமுறை தாண்டி வைத்திருக்கிறோம். பங்குகளை அப்படி வைத்திருக்கிறோமா?
கேள்வி: சென்னை போன்ற நகரங்களில் இருந்த பங்குச்சந்தைகள் ஏன் மூடப்பட்டன?
பதில்: நீர்மை நிறை உருவாக்கம் என்று சொல்லப்படும் liquidity இன்மையால்.
கேள்வி: பங்குச்சந்தையில் உங்கள் முதலீட்டுத் திட்டம் என்ன?
பதில்: தரமான பங்குகளை இனங்கண்டு அவ்வப்போது காலப்பன்மயமாக்கம் என்ற முறையில் அவற்றை வாங்குவது ...
கேள்வி: நீங்கள் காளையின் காதலரா அல்லது கரடியின் காதலரா?
பதில்: பங்குகளை வாங்கும் போது நான் கரடியின் காதலன். அவற்றை விற்கும் போது காளையின் காதலன்.
கேள்வி: சந்தை நகைச்சுவை ஏதேனும்?
பதில்: பங்கின் உள்ளார்ந்த மதிப்பு ரூ.592.39/-
பங்குகளைப் பிரிக்கும் பென்னி ஸ்டாக்.
இரட்டிப்பான மல்டிபேக்கர் பங்கு.
கேள்வி: 1963 ஆம் வருட L & T முதல் பொது வெளியீடு கோடிகளைக் கொடுத்திருக்கிறது என்பதென்னவோ உண்மை தான். ஆனால் 1963 ஆம் வருடம் நான் பிறக்கவேயில்லை. மேலும் 1963 ஆம் ஆண்டு 2000 ரூபாய் என்பதெல்லாம் ஆகப்பெரிய தொகை?
பதில்: ஒரு மரத்தை நட சிறந்த நேரம் பல்லாண்டுகளுக்கு முன்னர் இருந்தது. அடுத்த சிறந்த நேரம் இப்போது.
கேள்வி: HFT என்று சொல்லப்படும் High Frequency Trading, பங்குச்சந்தைக்கு நல்லதா?
பதில்: வேகம், விவேகம் அல்ல.
கேள்வி: மூன்றாம் உலகப்போர் வரப் போகிறது, உலகம் அழியப் போகிறது என்றெல்லாம் கூறுகிறார்கள். எதற்காக முதலீடு செய்ய வேண்டும்?
பதில்: முதலீடு செய்வதற்கான முதல் மனப்பாங்கு எதிர்காலத்தின் மீதான ஒரு நம்பிக்கை. இன்றை விட நாளை நன்றாக இருக்கும் என்பதான ஒரு எண்ணப்போக்கு. அது இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.
Comments
Post a Comment