படித்ததில் பிடித்தது - 1
படித்ததில் பிடித்தது - 1
1. வாழ்க்கை என்பது நமக்கு என்ன கிடைத்திருக்கிறது என்பதைப் பொறுத்தது அல்ல , அதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது .
2. இலக்கை விடப் பயணமே சாகசமானது , சவாலானது . எங்கு போய்ச் சேருகிறோம் என்பது முக்கியமே இல்லை . வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு நொடியையும் இரசித்து வாழ்வதில் இருக்கிறது .
3. இலாபத்தைக் கொண்டு வராத எல்லாச் செலவுகளுமே வீண் .
4. மனிதன் தூய்மையாக வைத்திருக்கும் தோட்டத்தை விட இயற்கை குப்பைக்கூளமாக வைத்திருக்கும் காடு தான் செழித்துக் காணப்படுகிறது .
5. அடுத்தவர்களுக்கு உதவுவதற்கு உங்களிடம் நிறைய இருக்க வேண்டிய அவசியமே இல்லை .
6. செல்வத்தை அனுபவிப்பதில் அல்ல , அதை உருவாக்குவதில் தான் ஆனந்தம் இருக்கிறது .
7. ஒன்றின் பெயரைத் தெரிந்து கொள்வதற்கும் அதைப் புரிந்து கொள்வதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது .
8. நரகத்தின் ஊடாகப் போகிறீர்களா ? போய்க்கொண்டே இருங்கள் . பாலைவனத்தின் சூட்டில் இருந்து தப்ப வேண்டுமென்றால் ஒரே வழி அதைக் கடப்பது தான் .
9. குறைவான அதிகாரம் கொள்வதே நல்ல அரசாக இருக்க முடியும் .
10.இலக்கு என்ற ஒன்றை வைத்துக் கொள்வதை விட மனத்தில் ஒரு தணியாத தாகம் இருக்க வேண்டும் .
வானமே எல்லை / கேப்டன் கோபிநாத்
Comments
Post a Comment