Posts

James Clear- மணி மொழிகள்- 2

James Clear- மணி மொழிகள்- 2 James Clear Quotes- 2 1. You have to fall in love with boredom. சலிப்புடன் காதல் கொள்ளுங்கள். 2. When the world seems uncontrollable, focus on what you can control. உலகம் கட்டுப்பாடற்றதாகத் தோன்றும்போது, ​​உங்களால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் கவனம் செலுத்துங்கள். 3. Life is a series of tradeoffs and greater results usually require greater tradeoffs . வாழ்க்கை என்பது பரிமாற்றங்களின் தொடர் மட்டுமே. மேலும், பெரிய முடிவுகளுக்கு பொதுவாகப் பெரிய பரிமாற்றங்கள் தேவைப்படுகின்றன. 4. The willingness to do the unsexy work is a competitive advantage. கவர்ச்சியற்ற வேலையைச் செய்வதில் விருப்பம் கொள்வது போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனுகூலத்தை அளிக்கிறது. 5. The people who stick with things for years and never stop almost always win the race. பல்லாண்டுகளாக ஒரு சில செயல்களைக் கடைப்பிடிப்பவர்கள் மற்றும் அதனை ஒருபோதும் நிறுத்தாதவர்கள் எப்போதும் பந்தயத்தில் வெற்றி பெறுகிறார்கள். 6. The secret of creative work is to make a lot and publish a little. படைப்பாற்றல் மிக்க எழுத்தின் இர...

பன்மடங்காளர்களைப் பல்லாண்டுகள் வைத்திருப்பது எப்படி?

பன்மடங்காளர்களைப் பல்லாண்டுகள்  வைத்திருப்பது எப்படி? பன்மடங்காளர்களை (Multibaggers) பல்லாண்டுகள் வைத்திருப்பது எப்படி என்று பார்ப்பதற்கு முன் பன்மடங்காளர்கள் என்பதை முதலில் வரையறுத்து விடலாம். பன்மடங்காளர் என்பது இரண்டு மடங்கு கூடிய பங்கு என்பதான ஒரு எண்ணப்போக்கு நிலவுகிறது. பன்மடங்காளர் என்று ஒரு பங்கைக் குறிப்பிட வேண்டுமென்றால் அவை குறைந்தபட்சம் நீங்கள் வாங்கிய விலையிலிருந்து 100 மடங்கு கூட வேண்டும். 100 மடங்கு என்பது எட்டாத ஒரு உயரம் போல் தோன்றினாலும் 100 மடங்காளர் என்பது தொடர்ந்தவாக்கிலான இரண்டு 10 மடங்காளர் மட்டுமே. 10 ரூபாய் பங்கு 10 மடங்கு கூடினால் அது 100 ரூபாய் ஆகி விடும். இந்த 100 ரூபாய் பங்கு 10 மடங்கு கூடினால் 1000 ரூபாய் ஆகி விடும்.  100 மடங்கு கூடும் வரை ஒரு பங்கை வைத்திருப்பது மட்டும் தான் இந்தப் பன்மடங்காளர் பயணத்தின் கடினமான ஒரு பகுதி. 100 மடங்காளர் ஆகி விட்டால் பின்னர் தன்னளவில் அது வேகமெடுக்கத் தொடங்கி விடும். மேலும் இந்தப் பங்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் பங்கு ஈட்டு விகிதம் (dividend yield) இந்தப் பங்குகளை விற்காமல் உங்களைக் காக்கும் அரணாக இருக்கும்....

விலையும் மதிப்பும்

விலையும் மதிப்பும் Price and Value  பங்குச்சந்தையில் விலை உயர்ந்த பங்குகள் எவை என்றால் சுலபமாகச் சொல்லி விடலாம். MRF (ரூ.1,46,195) Page Industries (ரூ.35,650) Shree Cement (ரூ.27,350) மதிப்பு மிகுந்த பங்குகள் என்றால் அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட முடியாது. சற்று யோசித்து, கணக்கிட்டுத் தான் சொல்ல முடியும். மதிப்பு என்ற கருத்தாக்கத்தில் நகரும் பகுதிகள் நிறைய வந்து விடும். எவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டாலும் விடை சரியானது தானா என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாது. பங்குகளின் விலை மற்றும் பங்குச்சந்தை குறியீடு போன்றவை விலை குறித்த அளவீடுகள். அளவீடு செய்ய இவை சுலபமாக இருக்கலாம். ஆனால் அதைக் கொண்டு நாம் முதலீட்டு முடிவுகள் எதனையும் எடுக்கக்கூடாது. உண்மையான மதிப்பைக் கண்டறிய நாம் இன்னும் சற்று ஆழமாகத் தோண்ட வேண்டும். முதலில் குறிப்பிட்ட MRF நிறுவனப்பங்கையே எடுத்துக் கொள்ளலாம். நிறுவனம் இதுவரை பங்குப் பிரிப்பு எதுவும் மேற்கொள்ளவில்லை. இரண்டு முறை மட்டும் இலவசப்பங்களிப்பை மேற்கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் பங்கு சார் முதல் (equity capital) 4.24 கோடி ரூபாய் மட்டுமே. பத்து ரூபாய் முக மதிப்பை...

Seneca- மணி மொழிகள்

Seneca- மணி மொழிகள் Seneca Quotes  1. We are not given a short life but we make it short and we are not ill-supplied but wasteful of it. நமக்குக் குறுகிய ஆயுள் வழங்கப்படவில்லை, ஆனால் நாம் அதைக் குறுகியதாக்குகிறோம், நமக்குக் குறைவாக வழங்கப்படுவதில்லை, மாறாக அதை நாம் வீணடிக்கிறோம். 2. Difficulties strengthen the mind as labour does the body. உழைப்பு உடலைப் பலப்படுத்துகிறது. சிரமங்கள் மனதைப் பலப்படுத்துகின்றன. 3. To be everywhere is to be nowhere. எல்லாவிடத்திலும் இருக்க வேண்டுமென்றால் எங்கும் இருக்க முடியாது. 4. The more a mind takes, the more it expands. ஒரு மனம் எவ்வளவு அதிகமாக எடுத்துக் கொள்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது விசாலமடைகிறது. 5. My anger is more likely to do me more harm than your wrong. நீ செய்த தவறை விட அதற்கான என் எதிர்வினையான கோபம் எனக்கு அதிக தீங்கை இழைக்க வல்லது. 6. The greatest wealth is the poverty of desires. ஆசைகளின் வறுமையே ஆகப்பெரிய வளமை. 7. We suffer more in imagination than in reality.  நாம் நிஜத்தை விட கற்பனையினால் அதிகம் துன்புறுகிறோம். 8. There is no di...

இலவசப் பங்களிப்புகளை இனங்காண்பது எப்படி?

இலவசப் பங்களிப்புகளை இனங்காண்பது எப்படி? நாட்கள் என்னும் பூக்கள் கொண்டு தான் ஆண்டுகள் என்னும் மாலைகள் கட்டப்படுகின்றன. ஆனால் நாட்கள் பார்க்காததையெல்லாம் ஆண்டுகள் பார்க்கின்றன. ஒரு மலையை அதன் அருகிலிருந்து பார்க்க முடியாது. காலம் என்பது தூரத்தின் மறு வடிவம்.                *                *                * எந்தெந்த நிறுவனங்கள் இலவசப்பங்குகளை வெளியிடும் என்று ஊகிக்க ஒரு வழி இருக்கிறது. பொதுவாக நிறுவனங்கள் தத்தமது வெள்ளி விழா ஆண்டு (25) பொன் விழா ஆண்டு (50) வைர விழா ஆண்டு (60) மற்றும் நூற்றாண்டில் இலவசப்பங்குகளை வெளியிடும். 2026 ல் எந்தெந்த நிறுவனங்கள் இத்தகைய ஆண்டுகளைக் கடக்கின்றன என்ற பட்டியலைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவற்றை அடிப்படைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அவை மதிப்பு முதலீடாக வர்த்தகமாகிறதா என்று சரி பார்க்கவும். பின்னர் இத்தகைய பங்குகளைக் காலப் பன்மயமாக்கம் என்ற வகையில் வாங்கலாம். இதன் இன்னொரு அனுகூலம் என்னவென்றால் இந்த நி...

அளவைகள் பலவிதம்

அளவைகள் பலவிதம் உங்களிடம் உள்ள சொத்துக்களை உங்களால் துல்லியமாகக் கணக்கிட முடிந்தால் நீங்கள் செல்வந்தர் அல்ல என்று ஒரு உலகச் செல்வந்தர் கூறியிருக்கிறார். செல்வந்தர்கள் மட்டுமல்ல, சாதாரணர்களின் செல்வத்தைக் கணக்கீடு செய்வதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. இந்த செல்வக் கணக்கீடு குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம்.  முதலில் bouncing capital என்பதாக அழைக்கப்படும் பங்குகளை எடுத்துக் கொள்ளலாம். பங்கு வர்த்தகம் நடைபெறும் காலங்களில் முதலீட்டாளர் செயலி(Investor App)யைத் திறந்தால் உங்கள் முதலீடு துள்ளிக் குதிப்பதைக் கண்கூடாகக் காணலாம். பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றதும் அன்றைய உங்கள் சொத்தின் மதிப்பு எவ்வளவு என்பதைச் செயலி காட்டும். செயலி தெரிவிப்பது பங்கின் விலைகளை மட்டுமே. மதிப்பை அல்ல. பங்கின் விலை வேறு அவற்றின் மதிப்பு வேறு என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எந்தச் செயலியும் பங்குகளின் மதிப்பைத் தெரிவிக்காது. அவைகளால் தெரிவிக்கவும் முடியாது. மேலும், இந்தப் பங்குகளின் மதிப்பு என்பது ஆளாளுக்கு மாறுபடும். பங்குகளின் மதிப்பு பார்க்கிறவர்களின் பார்வையில் இருக்கிறது. சில சமயங்களில் இந்த வேறுபாடு வெளிப்படையாகத...

அனுமானக் கேள்விகளும் அதற்கான பதில்களும்- 2

அ னுமானக் கேள்விகளும் அதற்கான பதில்களும்- 2 கேள்வி: சராசரியை நோக்கிய பின்னடைவு (Reversion to the mean) இல்லாவிட்டால் என்னவாகும்? பதில்: சந்தை என்பது ஒரு இடத்தால் ஆகப் பெற்றதல்ல. அது மாந்தர்களால் ஆகப்பெற்றது. அவர்கள் உணர்வுகளால் நெய்யப்பெற்றது. இந்த உணர்வுகளின் கொந்தளிப்பால் ஒரு சொத்தின் மதிப்பு அதி விலையில் வர்த்தகமாவதும் பின்னர் சராசரியை நோக்கிய பின்னடைவு என்ற அடிப்படையில் அது இறங்கி வருவதும் இயல்பானது. இந்த இறக்கம் அதன் சராசரிக்கும் கீழாக இறங்குவதும் இயல்பானது. பின்னர் சராசரியை நோக்கிய முன்னடைவு செயல்படத் தொடங்கும். வேறு மாதிரி சொல்வதானால் கடிகார ஊசல் மாதிரி ஒரு சொத்து அதன் உள்ளார்ந்த மதிப்பை விட அதிகமாகவும் (காளைச்சந்தை) குறைவாகவும் (கரடிச்சந்தை) வர்த்தகமாகும். சராசரியை நோக்கிய பின்னடைவும் முன்னடைவும் இல்லாவிட்டால் பங்குச்சந்தையும் அதன் மூலமான முதலீட்டு வாய்ப்புகளும் இல்லை என்றே சொல்லலாம். தனிப்பட்ட ஒரு பங்கைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட கால அளவில் அது ஒரு விலைப்பட்டையில் (price band) முன்னும் பின்னுமாக சராசரியை நோக்கிய முன்னடைவிற்கும் பின்னடைவிற்கும் உள்ளாகும். பின்னர் அதிகரிக்கும்...