வாழ்க்கை பதில்கள்- 3
வாழ்க்கை பதில்கள்- 3 கேள்வி: பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியுமா? பதில்: பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியும். தேவைப்படுபவர்களுக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பணத்தைக் கொடுத்துப் பாருங்கள். கேள்வி: எல்லாக் காலத்திற்கும், எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துவதான அறிவுரை ஏதேனும் இருக்கிறதா? பதில்: இதுவும் கடந்து போகும்! கேள்வி: நெருப்பால் நெருப்பை அணைக்க முடியுமா? பதில்: முடியும். காடு ஒன்றில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பரவுகையில் நெருப்பு பரவி வரும் பகுதியை அடுத்து நெருப்பு வைத்து விடுவார்கள். அந்த நெருப்பு, நிலப்பரப்பை மரம் செடி கொடிகளின்றி வெறுமையாக்கி விடும். அதனைத் தாண்டி நெருப்பு பரவாது. கேள்வி: பணத்தைப் பணமாகப் பார்ப்பது எப்படி? பதில்: பணத்தை ஒரு கருவியாகப் பாருங்கள். சுத்தியல் ஒரு கருவி. அந்தக் கருவியை எப்போது பயன்படுத்துவீர்கள்? ஆணியை அடிக்க மற்றும் ஆணியை எடுக்கும் போது. அதே மாதிரி பணத்தையும் பாருங்கள். பணம் என்பது நிதி விடுதலை மற்றும் அதன் மூலமான நேர விடுதலைக்கான ஒரு கருவி. அவ்வளவு மட்டுமே. மற்றபடி கையில் எப்போதும் சுத்தியலை வைத்திருந்தால் எதைப் பார்த்தாலும் ஆணியாகவே தெரியும். கேள்வ...