அறம்
அறம் Ethics பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்: 1. மிகை முதல் நீர்க்காமை 2. மிகை கடன் இல்லாமை 3. நிறுவனர் பங்கு 4. தரமான வளர்ச்சி 5. அகழி 6. அறம் இவற்றில் அறம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அறம் என்பது சலிப்பானின் பிற அளவுருக்கள் மாதிரி இருக்கப் பெறாது. மிகை முதல் நீர்க்காமை என்ற கணக்கில் அதனைக் குறைவாகக் கூட நீர்க்க முடியாது. அதனை அடமானம் வைத்துக் கடன் வாங்க முடியாது. SEBI விதிகளின் படி அதனை 75 சதவீதம் மட்டும் வைத்துக் கொள்ள முடியாது. தரமான வளர்ச்சிக்கு அறம் 100 சதவீதம் அவசியம். நீண்ட கால அடிப்படையில் 20 சதவீத அறப் பெருக்கத்தில் நிறுவனம் வளர்ந்து வருகிறது என்று கூற முடியாது. அறமே அகழியாகவும் செயல்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அறம் என்பது ஒரு வாழ்க்கை முறை. நாளும் தரமாக உயர்ந்து வரும் நிறுவனம் ஒன்றின் ஒரு பங்குச் சம்பாத்தியம் (EPS) இந்த ஒரு பங்குச் சம்பாத்தியத்தைப் பின்தொடரும் அதன் விலை-வருவாய் விகிதம் (PE) இவற்றின் பெருக்கமே பங்குச்சந்தை. ஆதாரமாக அது அறத்தின் மேல் நிலை கொண்டுள்ளது. அறம் போனால் அனைத்தும் போனதாக அர்த்தம். Satyam Computers ன் கற்பனைக் கணக்கு விவக...