சந்தைப் பெருங்குழப்பம்
சந்தைப் பெருங்குழப்பம் Market Chaos பங்குச்சந்தை, chaos என்று சொல்லத்தக்க வகையில் ஏன் எப்போதும் குழப்பத்தின் ஒரு கூடாரமாக இருக்கிறது? சந்தை, பொதுவாக அதன் பங்கேற்பாளர்களின் கூட்டு மதியின் (wisdom of crowds) காரணமாக எப்போதும் பொருளாதாரத்திற்கு ஒரு அடி முன்னதாகச் செல்லும். அந்த வகையில் பொருளாதாரம் ஒரு உச்சநிலையை எட்டியிருக்கும் போது தவிர்க்க முடியாமல் அதன் பின்னர் வரவிருக்கும் பொருளாதார மந்தம் மற்றும் வீழ்ச்சியை இனங்கண்டு சந்தை சரியும். அதே மாதிரி பொருளாதாரம் தரை தட்டும் போது சந்தை அதனை இனங்கண்டு பின்னர் வரவிருக்கும் முன்னேற்றங்களுக்குத் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்ளும். ஒட்டுமொத்த சந்தைக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட பங்குகளுக்கும் இது பொருந்தும். ஆனால், இது கடிகாரச்சுற்று கணக்காக எப்போதும் நிகழும் என்று கூறமுடியாது. சந்தை இதனை உணருங் காலையில் வேறு ஏதேனும் பிரச்னைகள் எழுந்தால் அது இந்த உணர்தலைப் பாதிப்பதாக அமையும். சில சமயம் நல்ல செய்தி வரும் போது சந்தை அதனை ஏற்கெனவே தள்ளுபடி (discount) செய்திருக்கும். அதாவது சந்தையில் அது ஏற்கெனவே ஒரு நேர்மமான பாதிப்பை...