Posts

போர்த்தொழில் போக்கு

போர்த்தொழில் போக்கு 1. Peace is not an absence of war, it is a virtue, a state of mind, a disposition for benevolence, confidence, justice- Baruch Spinoza  அமைதி என்பது போர் இல்லாமை மட்டுமல்ல; அது ஒரு நற்பண்பு, ஒரு மனோநிலை, ஒரு நன்னெறி, நம்பிக்கை மற்றும் நீதிக்கான ஒரு மனப்பாங்கு. 2. There never was a good war or a bad peace- Benjamin Franklin நல்ல போர் என்றோ, கெட்ட அமைதி என்றோ எதுவுமே இருந்ததில்லை. 3. How can you have a war on terrorism when war itself is terrorism? - Howard Zinn பயங்கரவாதமே ஒரு போர் எனும் போது, பயங்கரவாதத்திற்கு எதிராக நீங்கள் எப்படி ஒரு போரை நடத்த முடியும்? 4. War is what happens when language fails- Margaret Atwood மொழி தோற்றுப்போகும் புள்ளியில் தான் போர் தொடங்குகிறது. 5. War does not determine who is right- only who is left- Bertrand Russell யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதைப் போர் தீர்மானிப்பதில்லை—யார் எஞ்சியிருக்கிறார்கள் என்பதை மட்டுமே அது தீர்மானிக்கிறது. 6. The more you sweat in peace, the less you bleed in war- George S Patton அமைதிக்காக நீங்கள் எவ்வ...

பங்கு முதலீடுகளுக்குப் பணம் திரட்டுவது எப்படி?

பங்கு முதலீடுகளுக்குப் பணம் திரட்டுவது எப்படி? பங்குச்சந்தையில் தொடர்ந்தவாக்கிலான முதலீடுகளுக்குச் சிறு முதலீட்டாளர்களிடம் போதுமான பணம் இருக்கப்பெறாது என்பது உண்மை தான். அதுவும் buy and hold முதலீட்டு உத்திகளைத் தவம் போல் கடைப்பிடிப்பவர்களுக்கு இது இன்னும் கடினமான ஒன்றாக இருக்கும். மேலும், பங்குச்சந்தை முதலீடுகளுக்கு பூஜ்ய அல்லது குறை சதவீத வட்டியில் float money கிடைக்கப்பெற நாம் ஒன்றும் வாரன் பஃபெட் இல்லை. எனில், தொடர்ந்தவாக்கிலான பங்கு முதலீடுகளுக்கான பணத்தைத் திரட்டுவது எப்படி? வாருங்கள், பார்க்கலாம். Ford நிறுவனத்திற்கு ஒருமுறை பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கிகள் Ford நிறுவனத்திற்குக் கடன் வழங்கத் தயாராக இருந்தன. ஆனால், Henry Ford க்குக் கடன் என்ற வார்த்தையே பிடிக்காது. Henry Ford, அவரது நிறுவனத்தைத் தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்தார்.  தொழிற்சாலையில் வேண்டாத பொருட்களைக் கழிக்கும் வேலை மும்முரமாக நடைபெற்றது. அதன் மூலமாக நிறுவனத்திற்குத் தேவைக்கு அதிகமாகவே பணம் கிடைக்கப்பெற்றது. அதே மாதிரி நீங்கள் உங்கள் பங்குத்தொகுப்பையும் அவ்வப்போது பழுது பாருங்கள். அதன் மூலமாகவே உங்களுக்க...

எழுதுவது எப்படி?

எழுதுவது எப்படி? Writing is thinking in paper என்று William Zinsser சொன்னதுடன் எனக்கு முழு சம்மதம். எழுதுவது என்பது காகிதத்தில் சிந்திப்பது. அல்லது Google Notes ல் சிந்திப்பது. கூறியது கூறல் கூடாது. தேவையில்லாத வாசகங்கள் தேவையில்லாத இடங்களில் இடம் பெறக்கூடாது. ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செக்காவ் கூறியது மாதிரி, திரைப்படத்தில், துப்பாக்கி ஒன்றை சுவரில் மாட்டியிருப்பதாகக் காண்பித்தால் படம் முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடித்தே ஆக வேண்டும். வாசகங்களை அமைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 'கண்டேன் சீதையை' என்பதற்கும் 'சீதையைக் கண்டேன்' என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இராமன் சீதையைக் காணாமல் கண்ணீர் விட்டுக் கவலையே வடிவாய் இருக்கிறான். சீதையைத் தேடிச் சென்ற அனுமன் அசோகவனத்தில் சீதை இராவணனால் சிறை பிடிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதனை இராமனிடம் தெரிவிக்க வருகிறான். அனுமன், சீதையைக் கண்டேன் என்று சொல்லியிருக்கலாம். சீதையை முன்னிறுத்திச் சொல்லும் போது அனுமன் சீதையைக் கண்டானா இல்லையா என்பது தொக்கி நிற்கிறது. அந்தத் தொக்கம் ஒரு வினாடி தான் என்றாலும் இராமனுக்கு அந்தக் கஷ்ட...

வாழ்க்கை பதில்கள்- 3

வாழ்க்கை பதில்கள்- 3 கேள்வி: பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியுமா? பதில்: பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியும். தேவைப்படுபவர்களுக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பணத்தைக் கொடுத்துப் பாருங்கள். கேள்வி: எல்லாக் காலத்திற்கும், எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துவதான அறிவுரை ஏதேனும் இருக்கிறதா? பதில்: இதுவும் கடந்து போகும்! கேள்வி: நெருப்பால் நெருப்பை அணைக்க முடியுமா? பதில்: முடியும். காடு ஒன்றில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பரவுகையில் நெருப்பு பரவி வரும் பகுதியை அடுத்து நெருப்பு வைத்து விடுவார்கள். அந்த நெருப்பு, நிலப்பரப்பை மரம் செடி கொடிகளின்றி வெறுமையாக்கி விடும். அதனைத் தாண்டி நெருப்பு பரவாது. கேள்வி: பணத்தைப் பணமாகப் பார்ப்பது எப்படி? பதில்: பணத்தை ஒரு கருவியாகப் பாருங்கள். சுத்தியல் ஒரு கருவி. அந்தக் கருவியை எப்போது பயன்படுத்துவீர்கள்? ஆணியை அடிக்க மற்றும் ஆணியை எடுக்கும் போது. அதே மாதிரி பணத்தையும் பாருங்கள். பணம் என்பது நிதி விடுதலை மற்றும் அதன் மூலமான நேர விடுதலைக்கான ஒரு கருவி. அவ்வளவு மட்டுமே. மற்றபடி கையில் எப்போதும் சுத்தியலை வைத்திருந்தால் எதைப் பார்த்தாலும் ஆணியாகவே தெரியும். கேள்வ...

James Clear- மணி மொழிகள்- 2

James Clear- மணி மொழிகள்- 2 James Clear Quotes- 2 1. You have to fall in love with boredom. சலிப்புடன் காதல் கொள்ளுங்கள். 2. When the world seems uncontrollable, focus on what you can control. உலகம் கட்டுப்பாடற்றதாகத் தோன்றும்போது, ​​உங்களால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் கவனம் செலுத்துங்கள். 3. Life is a series of tradeoffs and greater results usually require greater tradeoffs . வாழ்க்கை என்பது பரிமாற்றங்களின் தொடர் மட்டுமே. மேலும், பெரிய முடிவுகளுக்கு பொதுவாகப் பெரிய பரிமாற்றங்கள் தேவைப்படுகின்றன. 4. The willingness to do the unsexy work is a competitive advantage. கவர்ச்சியற்ற வேலையைச் செய்வதில் விருப்பம் கொள்வது போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனுகூலத்தை அளிக்கிறது. 5. The people who stick with things for years and never stop almost always win the race. பல்லாண்டுகளாக ஒரு சில செயல்களைக் கடைப்பிடிப்பவர்கள் மற்றும் அதனை ஒருபோதும் நிறுத்தாதவர்கள் எப்போதும் பந்தயத்தில் வெற்றி பெறுகிறார்கள். 6. The secret of creative work is to make a lot and publish a little. படைப்பாற்றல் மிக்க எழுத்தின் இர...

பன்மடங்காளர்களைப் பல்லாண்டுகள் வைத்திருப்பது எப்படி?

பன்மடங்காளர்களைப் பல்லாண்டுகள்  வைத்திருப்பது எப்படி? பன்மடங்காளர்களை (Multibaggers) பல்லாண்டுகள் வைத்திருப்பது எப்படி என்று பார்ப்பதற்கு முன் பன்மடங்காளர்கள் என்பதை முதலில் வரையறுத்து விடலாம். பன்மடங்காளர் என்பது இரண்டு மடங்கு கூடிய பங்கு என்பதான ஒரு எண்ணப்போக்கு நிலவுகிறது. பன்மடங்காளர் என்று ஒரு பங்கைக் குறிப்பிட வேண்டுமென்றால் அவை குறைந்தபட்சம் நீங்கள் வாங்கிய விலையிலிருந்து 100 மடங்கு கூட வேண்டும். 100 மடங்கு என்பது எட்டாத ஒரு உயரம் போல் தோன்றினாலும் 100 மடங்காளர் என்பது தொடர்ந்தவாக்கிலான இரண்டு 10 மடங்காளர் மட்டுமே. 10 ரூபாய் பங்கு 10 மடங்கு கூடினால் அது 100 ரூபாய் ஆகி விடும். இந்த 100 ரூபாய் பங்கு 10 மடங்கு கூடினால் 1000 ரூபாய் ஆகி விடும்.  100 மடங்கு கூடும் வரை ஒரு பங்கை வைத்திருப்பது மட்டும் தான் இந்தப் பன்மடங்காளர் பயணத்தின் கடினமான ஒரு பகுதி. 100 மடங்காளர் ஆகி விட்டால் பின்னர் தன்னளவில் அது வேகமெடுக்கத் தொடங்கி விடும். மேலும் இந்தப் பங்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் பங்கு ஈட்டு விகிதம் (dividend yield) இந்தப் பங்குகளை விற்காமல் உங்களைக் காக்கும் அரணாக இருக்கும்....

விலையும் மதிப்பும்

விலையும் மதிப்பும் Price and Value  பங்குச்சந்தையில் விலை உயர்ந்த பங்குகள் எவை என்றால் சுலபமாகச் சொல்லி விடலாம். MRF (ரூ.1,46,195) Page Industries (ரூ.35,650) Shree Cement (ரூ.27,350) மதிப்பு மிகுந்த பங்குகள் என்றால் அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட முடியாது. சற்று யோசித்து, கணக்கிட்டுத் தான் சொல்ல முடியும். மதிப்பு என்ற கருத்தாக்கத்தில் நகரும் பகுதிகள் நிறைய வந்து விடும். எவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டாலும் விடை சரியானது தானா என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாது. பங்குகளின் விலை மற்றும் பங்குச்சந்தை குறியீடு போன்றவை விலை குறித்த அளவீடுகள். அளவீடு செய்ய இவை சுலபமாக இருக்கலாம். ஆனால் அதைக் கொண்டு நாம் முதலீட்டு முடிவுகள் எதனையும் எடுக்கக்கூடாது. உண்மையான மதிப்பைக் கண்டறிய நாம் இன்னும் சற்று ஆழமாகத் தோண்ட வேண்டும். முதலில் குறிப்பிட்ட MRF நிறுவனப்பங்கையே எடுத்துக் கொள்ளலாம். நிறுவனம் இதுவரை பங்குப் பிரிப்பு எதுவும் மேற்கொள்ளவில்லை. இரண்டு முறை மட்டும் இலவசப்பங்களிப்பை மேற்கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் பங்கு சார் முதல் (equity capital) 4.24 கோடி ரூபாய் மட்டுமே. பத்து ரூபாய் முக மதிப்பை...