பன்மடங்காளர்களைப் பல்லாண்டுகள் வைத்திருப்பது எப்படி?
பன்மடங்காளர்களைப் பல்லாண்டுகள் வைத்திருப்பது எப்படி? பன்மடங்காளர்களை (Multibaggers) பல்லாண்டுகள் வைத்திருப்பது எப்படி என்று பார்ப்பதற்கு முன் பன்மடங்காளர்கள் என்பதை முதலில் வரையறுத்து விடலாம். பன்மடங்காளர் என்பது இரண்டு மடங்கு கூடிய பங்கு என்பதான ஒரு எண்ணப்போக்கு நிலவுகிறது. பன்மடங்காளர் என்று ஒரு பங்கைக் குறிப்பிட வேண்டுமென்றால் அவை குறைந்தபட்சம் நீங்கள் வாங்கிய விலையிலிருந்து 100 மடங்கு கூட வேண்டும். 100 மடங்கு என்பது எட்டாத ஒரு உயரம் போல் தோன்றினாலும் 100 மடங்காளர் என்பது தொடர்ந்தவாக்கிலான இரண்டு 10 மடங்காளர் மட்டுமே. 10 ரூபாய் பங்கு 10 மடங்கு கூடினால் அது 100 ரூபாய் ஆகி விடும். இந்த 100 ரூபாய் பங்கு 10 மடங்கு கூடினால் 1000 ரூபாய் ஆகி விடும். 100 மடங்கு கூடும் வரை ஒரு பங்கை வைத்திருப்பது மட்டும் தான் இந்தப் பன்மடங்காளர் பயணத்தின் கடினமான ஒரு பகுதி. 100 மடங்காளர் ஆகி விட்டால் பின்னர் தன்னளவில் அது வேகமெடுக்கத் தொடங்கி விடும். மேலும் இந்தப் பங்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் பங்கு ஈட்டு விகிதம் (dividend yield) இந்தப் பங்குகளை விற்காமல் உங்களைக் காக்கும் அரணாக இருக்கும்....