உலகப் பணமொழிகள்- 3
உலகப் பணமொழிகள்- 3
1. பணம் வரும் போது அதற்கு இரண்டு கால்கள்; போகும் போது நூறு கால்கள்.
2. தென்றலை விதைப்பவன் புயலை அறுவடை செய்கிறான்.
3. வேக வேகமாகச் சேர்த்த செல்வங்கள் குறைந்து விடும்; சிறிது சிறிதாகச் சேர்ந்தவை பெருகும்.
4. கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல. அதிகம் விரும்புபவன் தான் ஏழை.
5. பாதிப் பணக்காரர் ஆகி விட்டால் முழுப் பணக்காரர் ஆவது எளிது.
6. பணத்தைக் கொடுத்தவனிடம் பல்லைக் காட்டிப் பேசிக் கொண்டிருந்தால் பணம் மீளாது.
7. வாணிபம் வாழ்நாள் முழுமைக்கும் ஒரு சொத்து.
8. வேண்டாத பொருள் ஒருநாளும் மலிவானதன்று. அது காசுக்கு ஒன்றாகிலும் மலிவன்று.
9. கடனாக ஆயிரத்திற்கு விற்பதைக் காட்டிலும் ரொக்கமாக எண்ணூறு பெறுவது மேல்.
10. மரம் நட்டவன் அதன் கனியை உண்ணல் அரிது.
Comments
Post a Comment