உலகப் பணமொழிகள் - 2
உலகப் பண மொழிகள்- 2
1. நாட்பட்ட கடன் தீர்ந்து போன கடன்.
2. ஒரு மேட்டை வெட்டினால் தான் ஒரு பள்ளம் நிரம்பும்.
3. பெற்றோர் விட்டுச் செல்லும் செல்வத்தை விட ஒரு கலை மேலானது.
4. ஓடினால் மட்டும் போதாது, உரிய காலத்தில் புறப்படவும் வேண்டும்.
5. கம்பளம் விற்றுக் கடனை அடைக்க வேண்டும் என்றால் கம்பளி ஆட்டை விற்கக்கூடாது.
6. துரதிர்ஷ்டத்தை விட நல்அதிர்ஷ்டத்தைத் தாங்கப் பெருங்குணங்கள் தேவை.
7. கடவுள் உனக்கு நிறைய ஆடுகளைக் கொடுப்பார். ஆனால், நீ தான் மந்தையைக் காத்துக் கொள்ள வேண்டும்.
8. கடலில் ஒரு துளி விழுந்தாலும் அந்த அளவுக்குக் கடல் பெரிதாகும்.
9. பெரும் செல்வம் சேர்க்க அதிகக் கஷ்டம் தேவையில்லை. முதலில் சிறிதளவு சேர்க்கவே சிரமப்பட வேண்டும்.
10. கரண்டியால் சேகரித்ததை மண்வெட்டியால் இறைக்காதீர்கள்.
Comments
Post a Comment