பங்குச்சந்தை பதில்கள் - 12

பங்குச்சந்தை பதில்கள் - 12


கேள்வி : வாரன் பஃபெட்டின் முதலீட்டு வெற்றிக்கு அடிப்படையான காரணம் என்ன ?


பதில் : 11 வயதில் ஆரம்பித்த அவரின் அறிவின் கூட்டுப்பெருக்கம் .


கேள்வி : காப்பீடு , இல்லாத பணத்தை உருவாக்குகிறது தானே ?


பதில் : ஆனால் அதனைப் பெற நாம் இல்லாது போக வேண்டுமே !


கேள்வி : எந்தப் பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் கோடிகளை அள்ள முடியும் ?


பதில் : எந்தப் பரஸ்பர நிதியும் உங்களைக் கோடீஸ்வரர் ஆக்காது . நீங்கள் தான் உங்கள் உணர்வுகளை பரஸ்பரம் மேலாண்மை செய்து கோடிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் .


கேள்வி : Short selling மூலமாகப் பணம் ஈட்டுவது தவறு தானே ? 


பதில் : கெட்டதை சங்கு ஊதி அறிவிப்பது சரி தானே ?


கேள்வி : பங்குச்சந்தையில் வெற்றி பெறுவதற்கான உத்தியை ஒரே வரியில் சொல்ல முடியுமா ?


பதில் : காளைச்சந்தையில் கரடியாக இருங்கள் , கரடிச்சந்தையில் காளையாக இருங்கள் .


கேள்வி : பங்குச்சந்தையில் விரைவாகப் பணம் ஈட்டுவதற்கான வழி என்ன ?


பதில் : மெதுவாகச் செல்வது .


கேள்வி : குறியீட்டு நிதிகளில் முதலீடு செய்வதை விட குறியீட்டுப் பங்குகளைத் தனிப்பட்ட முறையில் நாமே ஏன் வாங்கக்கூடாது ?


பதில் : தனிப்பட்ட முறையில் Nifty குறீயீட்டில் இடம் பெற்ற 50 பங்குகளையும் தலா ஒன்று என்ற கணக்கில் வாங்க ரூ.146696/- ஆகும் . பரவாயில்லையா ?


கேள்வி : முக மதிப்பு ஒரு ரூபாய்க்கும் கீழாக பங்குகள் உள்ளனவா ?


பதில் : நல்ல வேளையாக இல்லை .


கேள்வி : தின இலாபம் மற்றும் குறுகிய கால இலாபத்தை அடைய முனைவது தவறா ?


பதில் : பங்குச்சந்தை முதலீடு என்பது 100 மீட்டர் ஓட்டம் அல்ல . அது மாரத்தான் ஓட்டம் . வாழ்க்கை முழுவதற்குமான ஓட்டம் . வாழ்க்கையைக் கடந்த ஓட்டம் . 


கேள்வி : அதென்ன lifestyle inflation ?


பதில் : வருமானத்திற்குத் தகுந்தாற் போல செலவுகளை அதிகரித்துக் கொண்டே செல்வது இவ்வாறு நயமாக அழைக்கப்படுகிறது .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14