Posts

Showing posts from July, 2024

கணித மொழிகள்

கணித மொழிகள் Maths Quotes  1. Accounting is the language of business . கணக்கிடுதல் வியாபாரத்தின் மொழியாகும் . 2. The only way to learn mathematics is to do mathematics - Paul Halmos கணக்கை நீங்கள் கற்றுக்கொள்வதற்கான ஒரே வழி அதனை நீங்கள் போட்டுப் பார்க்க வேண்டும் . 3. Mathematics is not about numbers , equations , computations or algorithms . It's about understanding - William Paul Thurston கணிதம் என்பது எண்கள் , சமன்பாடுகள் , கணக்கீடுகள் மற்றும் செய்முறைகள் பற்றியதல்ல . அது புரிந்து கொள்ளலின் பாற்பட்டது . 4. Without mathematics , there's nothing you can do . Everything around you is mathematics . Everything around you is numbers - Shakhuntala Devi கணிதம் இல்லையென்றால் உங்களால் எதுவும் செய்ய முடியாது . உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் கணிதமே . உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் எண்களே . 5. There is geometry in the humming of the strings , there is music in the spacing of the spheres - Pythagoras மணியிழைகளின் ரீங்காரத்தில் வடிவியல் உள்ளது . கோளங்களின் இடைவெளியில் இசை இருக்கிறது . 6. Ma...

கதைக்குரு கதைகள் - 3

  கதைக்குரு கதைகள் - 3 1. குப்பையிலே கோமேதகம் ஒரு ஊரில் ஒரு பங்குச்சந்தை கதைக்குரு இருந்தார் . அவருடைய சிஷ்யர் குருவிடம் பின்வருமாறு சலித்துக் கொண்டார் . " நானும் பார்த்துப் பார்த்துத் தான் பங்குகளை வாங்குகிறேன் . ஆனால் அவ்வப்போது Cox and Kings முதலான களைகள் முளைத்த வண்ணமாகவே உள்ளன " கதைக்குரு வழக்கம் போல் ஒரு கதையைக் கூறத் தொடங்கினார் . என் குருவின் குரு ஒருவர் இருந்தார் . அவர் ஒரு சமயம் தோட்டத்தைச் சுத்தம் செய்யும் படி தனது சிஷ்யனைப் பணித்தார் . சிஷ்யன் தோட்டத்தில் கிடந்த இலை தழை காய் கனிகள் அனைத்தையும் மூட்டை கட்டி ஒரு ஓரத்தில் வைத்து விட்டு வந்தான் . நன்றாகச் சுத்தம் செய்யுமாறு குரு சிஷ்யனைக் கடிந்து கொண்டார் . சிஷ்யன் தோட்டம் முழுவதும் மறுபடியும் சுற்றி வந்து ஒரு ஓரத்தில் கிடந்த இலையை எடுத்துப் போட்டு விட்டுக் குருவை வணங்கினான் . " முட்டாளே ! என்ன செய்திருக்கிறாய் ? " என்று குரு ஒரு மரத்தைக் குலுக்கினார் . காய்கள் விழுந்தன . இன்னொரு மரத்தைக் குலுக்கினார் . கனிகள் விழுந்தன . இன்னொரு மரத்தைக் குலுக்கினார் . இலை தழைகள் விழுந்தன . " இப்போது தான் தோட்டம் சுத்தம...

அறுவடை நாள்

அறுவடை நாள் கண்ணீருடன் விதைக்கிறவர்கள் கெம்பீரமாய் அறுப்பார்கள் - பைபிள் வாசகம்              *                 *                  * சரி , பங்குகளின் ஒரு தொகுப்பைக் காலப் பன்மயமாக்கம் மூலமாக மதிப்பு முதலீட்டு அடிப்படையில் கட்டமைத்து விட்டீர்கள் . உங்கள் வயதும் அறுபது ஆகி விட்டது . இப்போது அறுவடைக்கான நேரம் . இந்தப் பங்குத் தொகுப்பை எப்படிப் பணமாக்கம் செய்வது ? அதற்கு ஏதாவது விதிகள் உள்ளனவா ? ஆம் . அது Rule of 4 percent என்பதாக அழைக்கப்படுகிறது . அதன் படி உங்கள் பங்குத் தொகுப்பிலிருந்து வருடம் ஒன்றுக்கு 4 சதவீதம் மதிப்புள்ள பங்குகளைப் பணமாக்கம் செய்து கொள்ளலாம் . பங்குத் தொகுப்பின் மதிப்பு ஒரு கோடி என்று கொண்டால் வருடத்திற்கு நான்கு இலட்சம் அதாவது மாதத்திற்கு 33333 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் .  1926 ஆம் ஆண்டிலிருந்து 1976 வரை பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தை கொடுத்த வருமானங்களை அடிப்படையாக வைத்து இந்த நான்கு சதவிகித விதி கட்டமைக்கப்பட்ட...

பன்மடங்காளர்கள் - கேள்வி பதில்

பன்மடங்காளர்கள் - கேள்வி பதில் Multibaggers - Q & A கேள்வி : பன்மடங்காளர் பங்குகளைக் கைப்பற்ற அடிப்படையாக நாம் என்ன செய்ய வேண்டும் ? பதில் : பங்குகள் பன்மடங்காளர் ஆகும் வரை அவற்றைப் பொறுமையாக வைத்திருக்க வேண்டும் . கேள்வி : பன்மடங்காளர் என்பது குறைந்த பட்சமாக எத்தனை மடங்காளர் ? பதில் : பன்மடங்காளர் பங்குகள் என்பதைக் குறைந்த பட்சமாக 100 மடங்காளர் என்று கொள்ளுங்கள் . கேள்வி : ஒரு பங்கு 100 மடங்காளர் என்ற நிலையை எட்டிப் பிடிக்க அதிக காலம் ஆகுமே ? பதில் : ஆம் . ஒரு பங்கு 20 சதவீத CAGR என்ற விலையில் வளர்ந்து வந்தால் அது 100 மடங்காளர் ஆக 25 ஆண்டுகள் ஆகும் . அதே சமயம் அது 36 சதவீத CAGR கொடுத்தால் 15 ஆண்டுகளிலேயே 100 மடங்காளர் ஆகி விடும் . 100 மடங்காளர் என்பதை 100 மடங்காளர் என்று பார்த்தால் அது ஏதோ எட்டிப் பிடிக்க முடியாத இலக்காகத் தோன்றும் . மாறாக அதனைத் தொடர்ந்த வாக்கிலான இரண்டு 10 மடங்காளர் என்பதாகப் பாருங்கள் . அதாவது 10 ரூபாய் பங்கு 10 மடங்காளர் ஆனால் அது 100 ரூபாய் ஆகி விடும் . இந்த 100 ரூபாய் பங்கு 10 மடங்காளர் ஆனால் 1000 ரூபாய் ஆகி விடும் . ஆக 10 ரூபாய் பங்கு 1000 ரூபாய் அதாவத...