கரடிகள் பலவிதம்
கரடிகள் பலவிதம் கேள்வி : எந்தக் கரடிச்சந்தை உண்மையிலேயே மதிப்பு உருவாக்கத்திற்கான ஒரு சிறந்த களமாக இருந்தது ? பதில் : இந்தியப் பங்குச்சந்தையில் கரடித் தாக்குதல் நடைபெற்ற ஆண்டுகளின் பட்டியல் : 1992 - ஹர்ஷத் மேதா ஊழல் 1998 - ஆசிய நிதி நெருக்கடி 2000 - தகவல் தொழில்நுட்பக் குமிழி வெடிப்பு 2008 - அமெரிக்க வீட்டுக்கடன் பிரச்னை 2011 - தீவிரவாதத் தாக்குதல் 2019 - கோவிட் 1992 ன் கரடிச்சந்தை , சட்ட திட்டங்களை முறையாக அமல்படுத்தாமை காரணமாக உருவானது . 1998 ல் ரஷ்யா அதன் நாணய மதிப்பைக் குறைத்ததால் ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்டது . 2000 ல் Y2K பிரச்னை எழுந்தது . அதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள மைய நிதி வங்கிகள் 1999 ல் வட்டி விகிதங்களைக் குறைத்து பணப்புழக்கத்தை அதிகரித்தன . 2000 ன் குமிழி வெடிப்புக்கு இது ஒரு மறைமுகமான காரணம் . அதன் நீட்சி தான் 2008 வீட்டுக்கடன் பிரச்னைக்கும் காரணமாக அமைந்தது . 2011 ன் கரடிச் சந்தைக்கு உலக வர்த்தக மையத் தீவிரவாதத் தாக்குதல் காரணமாக அமைந்தது . 2019 ன் கரடித் தாக்குதல் காற்று வடிவில் வந்தது . அடுத்த தாக்குதல் எங்கிருந்து எழும் என்று யாராலும் கணிக்க முடியாது ....