கதைக்குரு கதைகள் - 2
க தைக்குரு கதைகள் - 2 1. ஆட்டம் தெரிந்து ஆடு ஒரு சமயம் நிறுவனம் ஒன்று தனது பங்குதாரர்களுக்கு 8000 சதவீதம் பங்காதாயம் கொடுக்கப் போவதாக அறிவித்தது . அப்போது வங்கி நிரந்தர வைப்பு முதலீடுகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதம் மட்டுமே . நமது முதலீட்டாளருக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி . இருக்காதா பின்னே ? 6 சதவீதம் எங்கே ? 8000 சதவீதம் எங்கே ? நமது முதலீட்டாளர் உடனடியாக அந்த நிறுவனத்தின் பத்து பங்குகளை ஒரு பங்கு 4000 ரூபாய் என்ற விலையில் வாங்கினார் . சில நாட்கள் கழித்து வங்கிக் கணக்கை ஆன்லைனில் பார்த்த முதலீட்டாளருக்கு அதிர்ச்சியான அதிர்ச்சி . கணக்கில் 32 இலட்சத்திற்குப் பதிலாக வெறும் 1600 ரூபாய் மட்டுமே வரவாகியிருந்தது . உடனடியாக தனது சந்தைக்குருவைத் தேடி ஓடினார் . என் கணக்கில் எங்கே தவறு ? குரு சொன்னது : வங்கி முதலீட்டு ஆட்ட விதிமுறைகள் வேறு . சந்தை முதலீட்டு ஆட்ட விதிமுறைகள் வேறு . வங்கியில் நீ முதலீடு செய்த பணம் முழுமைக்குமாக 6 சதவீத வட்டி வருவாய் கிடைக்கும் . சந்தையில் நீ முதலீடு செய்த நிறுவனத்தின் முக மதிப்பிற்குத் தான் இந்த 8000 சதவீத பங்காதாயம் . மேலும் உனக்குக் கிடைக்கப்பெறுவதைப் பங்காத...