பழமொழி பதில்கள் - 1

பழமொழி பதில்கள் - 1


கேள்வி : பங்குச்சந்தை வியாபாரம் ஏன் அவ்வளவு பலன் தருவதாக இல்லை ?


பதில் : அடிக்கடி பறித்து நட்ட செடி ஒருபோதும் வளர்வதில்லை .


கேள்வி : திடீர் பணக்காரர்கள் நாளடைவில் தத்தம் பழைய நிலைமைக்குத் திரும்புவது ஏன் ?


பதில் : சட்டென்று வருவது பொட்டென்று போகும் .


கேள்வி : இந்தக் காளைச் சந்தையில் முதலீட்டுப் பெருக்கம் மூலமாக இலாபம் கிடைக்கும் போது பங்காதாயம் தரும் பங்குகளில் ஏன் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் ?


பதில் : காற்று வீசும் போது கை விசிறியின் பயன் தெரியாது .


கேள்வி : Futures and Options குறித்து நன்கு படித்து புரிந்து கொண்டு நிலைப்பாடு எடுப்பது குறித்து ?


பதில் : நெருப்பைத் தெரியாமல் மிதித்தாலும் சுடும் . தெரிந்து மிதித்தாலும் சுடும் .


கேள்வி : தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து ?


பதில் : தங்கத் திறவுகோல் எல்லாப் பூட்டுக்களையும் திறக்கும் .


கேள்வி : கடன் அட்டைகளை முறையாகப் பயன்படுத்துவது குறித்து ?


பதில் : கடன் அட்டை சொர்க்கத்தின் சாவியாகும் . நரகத்தின் சாவியும் அதுவே ஆகும் . 


கேள்வி : பங்குச்சந்தையின் எதிர்காலப் போக்கை எவ்விதம் கணிப்பது ?


பதில் : எதிர்காலத்தை வரையறுக்க கடந்த காலத்தைப் படிக்கவும் .


கேள்வி : ஏன் காளைச் சந்தையும் கரடிச் சந்தையும் மாறி மாறி வருகின்றன ?


பதில் : பகலுக்கு இரவு தேவை .


கேள்வி : கூட்டு வட்டியின் பலன்களைப் பெற அவ்வளவு காலம் காத்திருக்கத் தான் வேண்டுமா ?


பதில் : வளர நேரம் எடுக்கும் மரம் தலைமுறைக்கும் பலன் தருவதாக இருக்கும் .


கேள்வி : பெற்ற செல்வத்தைப் பேணிக் காப்பது எவ்வாறு ?


பதில் : இருந்தும் இல்லாமல் இருங்கள் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14