வாழ்க்கை மொழிகள் - 3

வாழ்க்கை மொழிகள் - 3


1. ஒருவன் பிறருக்குக் கொடுப்பதெல்லாம் தனக்குத் தானே கொடுத்துக் கொள்கிறான் 

- ரமணர்


2. இருள் என்பது மிகக்குறைந்த ஒளி 

- பாரதியார்


3. தவறு செய்யாதவன் எதுவும் செய்யாதவன் 

- மாகீ


4. தனக்குத் தெரிந்தவற்றை மட்டும் மனிதன் பேசுவானாகில் உலகில் முழு அமைதி நிலவும் 

- பெர்னார்ட் ஷா


5. நம்மை நோக்கிப் பாய்ந்து வரும் அம்பை நாம் கவனித்து விட்டால் அது குறைந்த வேகத்துடன் தான் நெருங்கும் 

- டான்டி


6. தன்னைக் காயப்படுத்திக் கொள்ளாமல் எந்த மனிதனும் முன்னேற முடியாது . ஏனெனில் கல்லும் அவனே, சிற்பியும் அவனே 

- அலெக்ஸி கேரல்


7. வண்ணத்துப்பூச்சிகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒன்றிரண்டு கம்பளிப்புழுக்களை சகித்துக் கொள்ளத் தான் வேண்டும்

- Antoine de exupery


8. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் , உலகில் மிகுந்த அழகுடைய பொருள்கள் எல்லாம் சிறிதும் பயனற்றவையே

- ரஸ்கின்


9. அவைகள் குருடாக இருக்கவேண்டும் என்று மனது நினைத்து விட்டால் கண்கள் பார்ப்பதில்லை . பூமியை இருள் மறைப்பது போல ஆசை உண்மைகளை மறைத்து விடுகிறது

- செனக்கா


10.நமது அறிவு பெருகப் பெருக நமது அறியாமை வெளியாகிறது 

- கென்னடி 

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14