Posts

Showing posts from August, 2022

வாழ்க்கை மொழிகள் - 3

வாழ்க்கை மொழிகள் - 3 1. ஒருவன் பிறருக்குக் கொடுப்பதெல்லாம் தனக்குத் தானே கொடுத்துக் கொள்கிறான்  - ரமணர் 2. இருள் என்பது மிகக்குறைந்த ஒளி  - பாரதியார் 3. தவறு செய்யாதவன் எதுவும் செய்யாதவன்  - மாகீ 4. தனக்குத் தெரிந்தவற்றை மட்டும் மனிதன் பேசுவானாகில் உலகில் முழு அமைதி நிலவும்  - பெர்னார்ட் ஷா 5. நம்மை நோக்கிப் பாய்ந்து வரும் அம்பை நாம் கவனித்து விட்டால் அது குறைந்த வேகத்துடன் தான் நெருங்கும்  - டான்டி 6. தன்னைக் காயப்படுத்திக் கொள்ளாமல் எந்த மனிதனும் முன்னேற முடியாது . ஏனெனில் கல்லும் அவனே, சிற்பியும் அவனே  - அலெக்ஸி கேரல் 7. வண்ணத்துப்பூச்சிகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒன்றிரண்டு கம்பளிப்புழுக்களை சகித்துக் கொள்ளத் தான் வேண்டும் - Antoine de exupery 8. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் , உலகில் மிகுந்த அழகுடைய பொருள்கள் எல்லாம் சிறிதும் பயனற்றவையே - ரஸ்கின் 9. அவைகள் குருடாக இருக்கவேண்டும் என்று மனது நினைத்து விட்டால் கண்கள் பார்ப்பதில்லை . பூமியை இருள் மறைப்பது போல ஆசை உண்மைகளை மறைத்து விடுகிறது - செனக்கா 10.நமது அறிவு பெருகப் பெருக நமது அறியாமை வெளியாகிறது...

கதைக்குரு கதைகள் - 1

கதைக்குரு கதைகள் - 1 ஒரு ஊரில் ஜென் குரு ஒருவர் இருந்தார் . அவர் தன் சிஷ்யர்களுக்குக் கதை வடிவில் (முதலீட்டுப்) பாடங்களை நடத்துவது வழக்கம் . ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு விஷயத்தை சிறிய கதை ஒன்று எளிதில் விளக்கி விடும் . சிஷ்யர்கள் அவரை கதைக்குரு என்று அன்போடு அழைத்து மகிழ்வது வழக்கம் . அவரின் கதைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நானும் அக மகிழ்கிறேன் . 1. விருப்ப மரம்  ஒரு ஊரில் முதலீட்டாளர் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் ஒருவர் இருந்தார் . அவர் பங்குச்சந்தையில் முதலீடு என்ற பெயரில் ஊக வணிகங்கள் பலவற்றைச் செய்து வந்தார் . முதல் பொது வெளியீட்டில் (IPO) பங்கு பெற்று பின்னர் அந்தப் பங்குகளை பட்டியல் இலாபத்திற்குக் கைமாற்றி விடுவார் . பெரும்பாலான சமயங்களில் நஷ்டத்திற்கு மட்டுமே விற்பார் . ஆனால் நஷ்டத்தை உடனடியாக மறந்து விடுவார் . தப்பித்தவறி அடைந்த இலாபங்களை மட்டும் மறக்காமல் அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருப்பார் . விளிம்பு நிலை வர்த்தகம் (margin trading) இல்லாத பங்குகளை விற்பது (Short selling) பெறுதிகள் (derivatives) தினசரி வணிகம் (day trading) மற்றும் ரூபாய்...

தலைகீழ் விகிதங்கள் - 2

தலைகீழ் விகிதங்கள் - 2 Investing for the long run works only as long as people don't believe it  - Peter Bernstein நீண்ட காலத்திற்கான முதலீடுகள் , அதில் மக்கள் நம்பிக்கை கொள்ளாத வரை மட்டுமே செயல்படுவதாக இருக்கும் . Peter Bernstein ன் இந்தப் பங்குமொழி மூலமாக என்ன சொல்ல வருகிறார் என்று கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம் . ஒரு பேச்சுக்கு எல்லா முதலீட்டாளர்களும் நீண்ட கால நோக்கைக் கைக்கொள்வதாகக் கற்பிதம் செய்து கொள்ளலாம் . இது ஒருபோதும் சாத்தியமில்லை என்றாலும் கற்பனைக்குதிரையை அவிழ்த்து விடுவோம் . நிறுவன முதலீட்டாளர்கள் உட்பட எல்லோரும் நிறுவனப் பங்குகளை அடிப்படைப் பகுப்பாய்வு செய்து மதிப்பு முதலீடாக வாங்கி பங்காதாயம் மூலமாக மட்டும் பலன் பெறுவதாக ஒரு சந்தை இயங்குகிறது . முதலில் அடி வாங்குவது நீர்மை நிறைத்தன்மை (Liquidity) முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதும் விற்பதுவுமாக இருந்தால் மட்டுமே நிறைய எண்ணிக்கையிலான பங்குகள் வர்த்தகமாகும் . இந்த நிறை எண்ணிக்கையில் தான் தாக்கச்செலவு (impact cost) மட்டுப்படும் . பங்குகளை வாங்கும் போது கூடுதல் விலை கொடுத்து வாங்குவது மற்றும் விற்கும் போது குறை வில...

லியோனார்டோ டாவின்சி - மணி மொழிகள்

லியோனார்டோ டாவின்சி - மணி மொழிகள் Leonardo da Vinci Quotes 1. Learning never exhausts the mind . கற்றல் உங்கள் மனதை ஒருபோதும் சோர்வடையச் செய்யாது . 2. The noblest pleasure is the joy of understanding . புரிந்து கொள்ளலின் அக மலர்ச்சியே உன்னதமான மகிழ்ச்சி . 3. Art is never finished , only abandoned . கலை ஒருபோதும் முற்றுப் பெறுவதில்லை . அது கை விட மட்டுமே படுகிறது . 4. There are three classes of people : those who see , those who see when they are shown , those who do not see . மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் . முதல் வகையினர் பார்ப்பவர்கள் . இரண்டாவது காண்பித்தால் பார்ப்பவர்கள் . மூன்றாவது பார்க்காதவர்கள் . 5. Tears come from the heart and not from the brain . கண்ணீர்த்துளிகள் மூளையிலிருந்து வருவதில்லை . அவை இதயத்திலிருந்து வருகின்றன . 6. Iron rusts from disuse , water loses its purity from stagnation ... ever so does inaction sap the vigor of the mind . உபயோகம் இல்லாவிட்டால் இரும்பு துருப்பிடிக்கிறது . தேங்கியே கிடக்கும் தண்ணீர் தன் தூய்மையை இழக்கிறது . செயல்படாமை மனதின் வீரியத்த...