வாழ்க்கை மொழிகள் - 3
வாழ்க்கை மொழிகள் - 3 1. ஒருவன் பிறருக்குக் கொடுப்பதெல்லாம் தனக்குத் தானே கொடுத்துக் கொள்கிறான் - ரமணர் 2. இருள் என்பது மிகக்குறைந்த ஒளி - பாரதியார் 3. தவறு செய்யாதவன் எதுவும் செய்யாதவன் - மாகீ 4. தனக்குத் தெரிந்தவற்றை மட்டும் மனிதன் பேசுவானாகில் உலகில் முழு அமைதி நிலவும் - பெர்னார்ட் ஷா 5. நம்மை நோக்கிப் பாய்ந்து வரும் அம்பை நாம் கவனித்து விட்டால் அது குறைந்த வேகத்துடன் தான் நெருங்கும் - டான்டி 6. தன்னைக் காயப்படுத்திக் கொள்ளாமல் எந்த மனிதனும் முன்னேற முடியாது . ஏனெனில் கல்லும் அவனே, சிற்பியும் அவனே - அலெக்ஸி கேரல் 7. வண்ணத்துப்பூச்சிகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒன்றிரண்டு கம்பளிப்புழுக்களை சகித்துக் கொள்ளத் தான் வேண்டும் - Antoine de exupery 8. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் , உலகில் மிகுந்த அழகுடைய பொருள்கள் எல்லாம் சிறிதும் பயனற்றவையே - ரஸ்கின் 9. அவைகள் குருடாக இருக்கவேண்டும் என்று மனது நினைத்து விட்டால் கண்கள் பார்ப்பதில்லை . பூமியை இருள் மறைப்பது போல ஆசை உண்மைகளை மறைத்து விடுகிறது - செனக்கா 10.நமது அறிவு பெருகப் பெருக நமது அறியாமை வெளியாகிறது...