வாழ்க்கை மொழிகள் - 1

வாழ்க்கை மொழிகள் - 1


1. This too shall pass .

இதுவும் கடந்து போகும் .


2. The only thing we have to fear is fear itself .

- Franklin Roosevelt

நாம் பயத்தைப் பற்றி மட்டுமே பயம் கொள்ள வேண்டும் .


3. Keep calm and carry on .

அமைதி காக்கவும் மற்றும் தொடர்ந்து செல்லவும் .


4. A life lived in fear is a life half lived

- Baz Cuhrmann

பயத்தில் வாழ்வது பாதி வாழ்க்கை மட்டுமே .


5. Worry is like a rocking chair; It gives you something to do but never gets you anywhere

- Erma Bombeck

கவலை என்பது ஆடும் நாற்காலி போன்றது. அது உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது .


6. Nothing in life is to be feared, it is only to be understood

- Marie Curie

வாழ்க்கையில் எதற்கும் பயம் கொள்ள வேண்டியதில்லை, புரிந்து கொள்ள மட்டுமே வேண்டும் .


7. Often when you think you are at the end of something, you are at the beginning of something else

- Fred Rogers

ஒன்றின் முடிவில் நீங்கள் இருப்பதாகக் கொண்டாலும், அது மற்றொன்றின் தொடக்கமே .


8. If you are going through hell, keep going

- Winston Churchill

நீங்கள் நரகத்தின் வழியாகச் சென்றாலும் சென்று கொண்டே இருங்கள் .


9. I rebel therefore I exist

- Albert Camus

நான் கலகக்காரன் . அதனால் நான் உயிர் பெறுகிறேன் .


10.There are times when explanations no matter how reasonable, just don't seem to help

- Fred Rogers

சில சமயங்களில் , விளக்கங்கள் , நியாயமான முறையில் அறிவிற்கு ஏற்புடையதாக இருந்தாலும் அவை உதவிகரமாக இருக்காது .


' இதுவும் கடந்து போகும் ' என்பதற்கான ஒரு சிறிய கதை . ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் . அவர் ஒருமுறை பங்குச்சந்தையில் முதலீடு செய்து மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகி விட்டார் . இத்தனைக்கும் ராஜா நீண்ட கால மதிப்பு முதலீட்டாளர் . தினசரி வணிகம் , குறுகிய கால வணிகம் , இல்லாத பங்குகளை விற்று விட்டு பின் வாங்கி கணக்கை நேர் செய்யும் short selling மற்றும் பெறுதிகள் (derivatives) என்று அழைக்கப்படும் futures and options சித்து விளையாட்டுகள் எல்லாம் ராஜா அறியாதது . மேலும் பங்குச்சந்தையில்  முதலீடு செய்தது அவருடைய சொந்தப் பணத்தை மட்டுமல்ல மக்களின் வரிப்பணமும் அதில் அடக்கம் . மக்களின் சுபிட்சத்திற்காக முதலீடு செய்தது இவ்வாறு ஆகி விட்டதே என்று ராஜாவிற்கு வருத்தமான வருத்தம் . சுபி ஞானி ஒருவரைத் தேடி ஓடுகிறார் . சுவாமி , இந்த மாதிரி எனக்கு ஒரு கஷ்டம் , நான் என்ன செய்வேன் என்பதாகப் புலம்பிய ராஜாவிற்கு ஞானி கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு மோதிரத்தை வழங்குகிறார் . அந்த மோதிரத்தில் ' இதுவும் கடந்து போகும் ' என்று பொறிக்கப் பட்டிருக்கிறது . ராஜா மனக்கிலேசம் அடையும் போதெல்லாம் அந்த மோதிரத்தின் மந்திர வார்த்தைகளைப் பார்த்து உச்சாடனம் செய்கிறார் . இதுவும் கடந்து போகும் ... இதுவும் கடந்து போகும் ... காலம் ஒரு மிகப்பெரிய மருந்து . எந்தத் துன்பமும் காலப்போக்கில் மறைந்து விடும் . ராஜாவின் வாழ்க்கையிலும் இலையுதிர் காலம் முடிந்து இப்போது வசந்த காலம் . அதாவது கரடிச்சந்தை முடிந்து இப்போது காளைச்சந்தையின் காலம் . ராஜா இப்போது மோதிரத்தைப் பார்க்கிறார் . இதுவும் கடந்து போகும் . அப்போது தான்  அவருக்கு ஞானி சொல்ல வருவதின் சூட்சுமம் புரிகிறது . வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சமநிலையுடன் அணுக வேண்டும் . இரண்டையும் சமமாகப் பாவிக்க வேண்டும் . இவ்வாறாக ' இதுவும் கடந்து போகும் ' என்ற வாசகம் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்திப் போகும் காலம் கடந்த ஒரு மந்திரமாகிறது .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14