எளிமை மொழிகள்
எளிமை மொழிகள்
1. Simplicity is the ultimate sophistication
- Leonardo da Vinci
எளிமையே இறுதியான அதி நுட்பம் .
2. Life is very simple, but we insist on making it complicated - Confucius
வாழ்க்கை மிக எளிமையானது . நாம் தான் அதை சிக்கலாக்குகிறோம் .
3. Simplicity is the art of thoughtful reduction
- Gautam Baid
எளிமை என்பது சிந்தித்துக் குறைப்பதான ஒரு கலையாகும் .
4. If you can't explain it simple, you don't understand it well enough - Albert Einstein
உங்களால் ஒன்றை எளிமையாக விளக்க இயலவில்லை என்றால் அதனை நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் .
5. The difference between successful people and very successful people is that very successful people say no to almost everything - Warren Buffett
வெற்றிகரமான மனிதர்களுக்கும் மிக வெற்றிகரமான மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மிக வெற்றிகரமான மனிதர்கள் நிறைய விஷயங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள் .
6. It is very simple to be happy, but it is very difficult to be simple - Tagore
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது எளிமையானது. ஆனால் எளிமையாக இருக்க வேண்டும் என்பது கடினமானது .
7. Minimalism in life isn't a destination to reach, it is the path to follow - Gautam Baid
எளிமைப்படுத்துதல் என்பது அடைய வேண்டிய ஒரு இலக்கல்ல. அது பின்பற்ற வேண்டிய ஒரு பாதையாகும் .
8. Enjoy the little things and one day you may look back and realize they were the big things - Robert brault
வாழ்க்கையின் சின்னஞ்சிறிய விஷயங்களில் மகிழ்ச்சி கொள்ளுங்கள் , ஒருநாள் அவை எவ்வளவு பெரியவை என்று உணர்வீர்கள் .
9. He who is contended is rich - Lao Tzu
எவர் மனநிறைவுடன் இருக்கிறாரோ அவரே பணக்காரர் ஆவார் .
10. Perfection is achieved, not when there is nothing more to add, but when there is nothing left to take away - Antoine de exupery
பூரணம் என்பது இனி எதையும் இணைக்க இயலாது என்பதில் இல்லை. மாறாக இனி எதையும் எடுக்க இயலாது என்பதில் இருக்கிறது .
ஒரு சிறிய கதை . ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் . அவர் தனது இராஜ்ஜியத்தின் ஆஸ்தான சிற்பியிடம் வாசுதேவ கிருஷ்ணனின் சிலை ஒன்றைச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார் . சிற்பி , இரவு பகல் பாராது தன் ஆன்மாவை உருக்கி வாசுதேவ கிருஷ்ணனின் சிலை ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தார் . வாசுதேவ கிருஷ்ணனின் சிலை மனோகரமாகப் படைக்கப்பட்டிருந்தது . வானத்தின் நீல நிறம் அனைத்தையும் குழைத்துப் பூசியிருந்தான் அந்தச் சிற்பி . கண்களில் அவ்வளவு ஒரு கருணை ... சாந்தம் ... அந்தச் சிலையைப் பார்ப்பவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகி ஓடியது . ராஜா , எவ்விதம் இவ்வாறு ஒரு அருமையான சிலையைப் படைத்தீர் என்று சிற்பியிடம் கேட்டார் . அது ரொம்பவும் எளிய விஷயம் தான் மகாராஜா , அந்தப் பளிங்குக் கல்லிற்குள் தான் வாசுதேவ கிருஷ்ணனின் சிலை இருந்தது . அந்தக் கல்லில் எது எது வாசுதேவ கிருஷ்ணன் இல்லையோ அதை மட்டும் வெட்டி எடுத்து விட்டேன் .
பங்குச் சந்தையும் அந்தப் பளிங்குக்கல்லை ஒத்தது தான் . அது ஒரு complex adaptive system . ஒரு சிக்கலான தகவமைப்பு அமைப்பு . அதிலிருந்து தேவையில்லாத கருத்தாக்கங்களான தினசரி மற்றும் குறுகிய கால வணிகம் , அதன் மூலமான தரகு மற்றும் வரி வகையறா , F & O ஊக வணிகங்கள் போன்றவைகளை வெட்டி எறிந்து விடுங்கள் . பங்குச்சந்தையை ஒரே வரியில் எளிமையாக விளக்க வேண்டுமென்றால் பின்வருமாறு சொல்லலாம் . பங்குச்சந்தை உயர்ந்து வரும் தளங்களில் ஏறி இறங்கும் தன்மை படைத்தது . தற்போதைய தளம் 60000 ஆக உள்ளது . முன்பொரு காலத்தில் அது 6000 ஆக இருந்தது . முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று மட்டும் தான் . இதில் குறைந்த பட்ச உராய்வுச் செலவுகளுடன் பங்கு பெறுவது ... மிக எளிமையானது , ஆனால் இலகுவானதல்ல . Simple but not easy .
Comments
Post a Comment