புத்தகம் பேசுது
புத்தகம் பேசுது
1. ஒரு புத்தகத்தைப் படிக்கையில் தனிமை என்பதே கிடையாது
Susan Wiggs
2. ஒரு சிறுவர்களுக்கான கதை, சிறுவர்கள் மட்டுமே படித்துச் சுவைக்கும் படி எழுதப்பட்டிருந்தால், அது ஒரு நல்ல, சிறுவர்களுக்கான கதை அல்ல
C S Lewis
3. புத்தகம் படிப்பது ஒரு சிறந்த பொழுதுபோக்கு. விளம்பர இடைவேளை கிடையாது. திடீரென்று மின்கலம் (battery) தீர்ந்து விடாது. கொடுக்கும் காசுக்கு முழு மதிப்பு
Stephen King
4. நல்ல புத்தகங்கள் தனது எல்லா இரகசியங்களையும் ஒரே சமயத்தில் சொல்லி விடாது
Stephen King
5. புத்தகங்களை எரிப்பதை விட சில மோசமான குற்றங்கள் இருக்கின்றன. புத்தகங்களைப் படிக்காமல் இருப்பது அவற்றில் ஒன்று
Joseph Brodsky
6. புத்தகங்கள் கண்ணாடி போன்றவை. உங்களுக்குள் உள்ளதையே அது பிரதிபலிக்கும்
Carlos Ruiz Zafou
7. சொர்க்கம் என்பது ஒரு விதமான நூலகம் என்பதாகவே நான் எண்ணுகிறேன்
Jorge Luis Borges
8. புத்தகம் படிப்பது என்பது தனிமைத்தீவில் இருந்து கொண்டு பிறருடன் தொடர்பு கொள்வதான ஒரு அதிசய நிகழ்வு
M Proust
9. எல்லோரும் படிக்கும் புத்தகங்களையே நாமும் படித்துக் கொண்டிருந்தால் எல்லோரின் சிந்தனை மாதிரியே தான் நம் சிந்தனையும் இருக்கும்
Haruki Murakami
10.ஒரு புத்தகத்தை மீண்டும் மீண்டும் படித்து நீங்கள் மனமகிழ்ச்சியை அடையவில்லை என்றால் படிப்பதற்கே அர்த்தமில்லை
Oscar Wilde
11.ஒரே ஆற்றில் இரண்டு முறை குளிக்க முடியாது. இரண்டு பேர் ஒரே புத்தகத்தைப் படிக்க முடியாது.
Edmund Wilson
12.ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று மிகவும் விரும்புகிறீர்கள். அதனை யாரும் இதுவரை எழுதவில்லை என்றால் நீங்களே எழுதுங்கள்.
Toni Morrison
13.நல்ல புத்தகங்களைப் படிப்பது என்பது கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் வாழ்ந்த ஒப்பற்ற மனிதர்களுடன் பேசுவது போன்றதாகும்.
Rene Descartes
14.கடற்கொள்ளையர்களால் உலகம் முழுவதும் சூறையாடப்பட்ட பொக்கிஷங்களை விட அதிகமான பொக்கிஷம் புத்தகங்களில் உள்ளது
Walt Disney
15.புத்தகம் என்பது உங்கள் கையில் ஏந்தக் கூடிய ஒரு கனவு
Neil gaiman
16.புத்தகங்கள் அமைதியான மற்றும் நிரந்தரமான நண்பர்கள். எளிதில் அணுகக்கூடிய புத்திசாலியான ஆலோசகர்கள் மற்றும் பொறுமையான ஆசிரியர்கள்
Charles Eliot
17.அறிவார்ந்த ஒருவரை எதிர்கொண்டால் அவர் என்னென்ன புத்தகங்களைப் படிக்கிறார் என்று கேளுங்கள்
Ralph Waldo Emerson
18.மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியாது. ஆனால் புத்தகங்களை வாங்கலாம்.
19.நாம் புத்தகங்களில் நம்மையே இழக்கிறோம். நம்மையே நாம் கண்டெடுக்கிறோம்.
20.ஆயிரம் வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கிறேன். ஆயிரம் பேரை நான் காதலித்திருக்கிறேன். தூரா தொலைவில் உள்ள உலகங்களை நான் கடந்திருக்கிறேன். காலத்தின் முடிவை நான் கண்டிருக்கிறேன். ஏனெனில் நான் படிக்கிறேன்.
George R R Martin
Comments
Post a Comment