Posts

Showing posts from January, 2025

அருமைப்பாடு சாய்வு

அருமைப்பாடு சாய்வு Scarcity Bias சாதாரண பொருட்களுக்கு அசாதாரணமான காலங்களில் ஏற்படும் செயற்கையான தட்டுப்பாடு அருமைப்பாடு சாய்வு (Scarcity Bias) என்பதாக அழைக்கப்படுகிறது . கோவிட் 19 நோய்த் தொற்றின் போது முகக் கவசத்திற்கான தேவைப்பாடு (demand) மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளானது . ஆனால் அளிப்பு (supply) குறைவாக இருந்தது . விளைவாக அதன் விலை நாளும் அதிகரித்த வண்ணம் இருந்தது . இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது முகக்கவசம் கிடைத்தற்கரிய பொருள் ஒன்றும் அல்ல . அந்தக் காலகட்டத்தில் அதற்கான தேவை அதிகமாக இருந்தது . Panic buying என்ற அடிப்படையில் மக்களும் முகக் கவசத்தினைப் போட்டி போட்டு வாங்கி அதற்கான அருமைப்பாட்டை உயர்த்திய வண்ணம் இருந்தனர் .  சில பருவங்களில் சில காய்கனிகள் விளையாது . அல்லது வரத்து குறைவாக இருக்கும் . அப்போது அவற்றின் விலைகள் அருமைப்பாடு சாய்வுக்கு உள்ளாகும் . உழவர் சந்தையில் ஒரேயொருவரிடம் தான் முருங்கைக்காய் இருக்கிறதென்றால் அவர் வைத்தது தான் விலை . நிறுவனங்கள் செயற்கையாக ஒரு பொருளுக்கு அல்லது சேவைக்கான அருமைப்பாட்டை உயர்த்தும் செயல்களில் ஈடுபடும் . இன்றே கடைசி , முதலில் வருபவ...

பங்குச்சந்தை பதில்கள் - 14

ப ங்குச்சந்தை பதில்கள் - 14 கேள்வி : கும்பமேளா காலங்களில் சந்தை சரிவது குறித்து ? பதில் : கலைந்து செல்லும் மேகங்களில் உருவங்களைப் பார்க்கும் விளையாட்டு . கேள்வி : Efficient Market Hypothesis என்பதை ஒரே வரியில் விளக்க முடியுமா ? பதில் : பங்கின் விலை = பங்கின் மதிப்பு  கேள்வி : சந்தை அடிக்கடி சரிவுடன் நிறைவடைவதைக் கவனித்தீரா ? பதில் : சரிவே நிறைவு ! கேள்வி : புதிய Demat கணக்குகளின் எண்ணிக்கை வரலாற்று உச்சத்தை எட்டியிருப்பது குறித்து ? பதில் : காளைச்சந்தை , Demat கணக்குகளின் எண்ணிக்கையை வரலாற்று உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது . கரடிச்சந்தையில் என்ன ஆகிறது என்று பார்க்க வேண்டும் . கேள்வி : பன்மடங்காளராகட்டும் என்று பங்கு ஒன்றை வைத்திருந்தேன் . இரு மடங்காளராகிய பங்கு இப்போது பாதி குறைந்து ஒரு மடங்காளர் ஆகி விட்டது . சற்று 'ஙே' என்பதாக உணர்கிறேன் ? பதில் : நீண்ட காலத்தில் 'ஓஹோ' என்றுணர இந்தக் குறுகிய கால 'ஙே'க்களைச் சகித்துக் கொண்டு தான் ஆகவேண்டும் . கேள்வி : அடுத்த ஓராண்டில் 200 சதவீத வருமானத்தைத் தரும் பங்கு எதுவென்று சொல்ல முடியுமா ? பதில் : கேட்பது த...

முதல் பொது வெளியீடு

முதல் பொது வெளியீடு Initial Public Offer நிறுவனம் ஒன்று முதன்முதலாகப் பொதுப் பங்கு வெளியிடுவது முதல் பொது வெளியீடு (IPO) என்பதாக அழைக்கப்படுகிறது . நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியீட்டை மேற்கொள்வதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் உள்ளன . துணிகர முதலீட்டு நிதிகள் (Venture Capital Funds) மற்றும் நிறுவனத்தின் தொடக்க நிலை முதலீட்டாளர்களுக்கு ஒரு மதிப்புத்திறப்பு (value unlocking) என்ற அடிப்படையில் பங்குகளைப் பட்டியலிடுவது (listing) முதல் காரணம் . இரண்டாவது , நிறுவனத்தின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு வேண்டிய நிதியைத் திரட்டும் பொருட்டு நிறுவனங்கள் பட்டியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன . மூன்றாவது , ஒழுங்கு விதிகளின் பொருட்டு ... CAMS நிறுவனம் இந்தக் காரணத்திற்காக மட்டுமே பட்டியலிடப்பட்டது . தேசிய பங்குச்சந்தை  (National Stock Exchange) CAMS நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டிருந்தது . CAMS நிறுவனம் முன்னணி பரஸ்பர நிதிகளின் பதிவாளர் என்ற முறையில் அதற்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் ஆர்வ முரண் (conflict of interest) எழும் என்ற அடிப்படையில் SEBI , தேசிய பங்குச்சந்தை , அதன் CAMS நிறுவன முதலீட்டை விற்ற...

Daniel Crosby - மணி மொழிகள்

Daniel Crosby- மணி மொழிகள் 1. Worry less about the economy and more about your economy . நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றிக் கவலைப்படுவதை விடுத்து வீட்டின் பொருளாதாரத்தைப் பற்றிக் கவலை கொள்ளுங்கள் . 2. Humans are wired to act ; markets tend to reward inaction . மாந்தர்கள் செயலால் கட்டப் பட்டிருக்கிறார்கள் ; சந்தை செயலற்ற தன்மைக்கு ஊக்கமளிக்கிறது . 3. Bear markets , recession and especially uncertainty are the psychological price I pay for strong returns . கரடிச்சந்தை , பொருளாதார மந்தநிலை மற்றும் மிக முக்கியமாக , நிச்சயமின்மை ஆகியவை , சந்தை எனக்குக் கொடுக்கும் நிலையான வருமானத்திற்கு நான் தரும் மனோரீதியான விலையாகும் . 4. I am the biggest risk to my long-term wealth creation . எனது நீண்ட கால செல்வ உருவாக்கத்திற்கான ஆகப்பெரிய இடர்ப்பாடு நான் மட்டுமே . 5. I win by not losing . நான் தோற்காமல் இருப்பதன் மூலமாக வெற்றியடைகிறேன் . 6. The best thing to do is often , but not always , nothing . செயலற்ற தன்மையே , எப்போதும் என்று சொல்ல முடியாவிட்டாலும் , பெரும்பாலான சமயங்களில் சிறந்த ஒரு செயலாக இருக்கும...