Posts

Showing posts from August, 2025

விலை வருவாய் விகிதம்- ஒரு விளக்கம்

விலை வருவாய் விகிதம்- ஒரு விளக்கம் All about PE Price Earning multiple என்பதாக அழைக்கப்படும் விலை வருவாய் விகிதம் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வில் (Fundamental Analysis) ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. நிறுவனத்தின் ஒரு பங்கு, 15 ரூபாய் வருவாய் (Earnings Per Share - EPS) ஈட்டுவதாகக் கொள்ளலாம். சந்தையில் நிறுவனப் பங்கின் விலை 300 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது என்றால் அதன் விலை வருவாய் விகிதம் (Price Earning multiple - PE) 300 ÷ 15 அதாவது 20. இதற்கான சமன்பாடு PE = Share price ÷ EPS  ஒவ்வொரு துறைக்கும் இது மாதிரி ஒவ்வொரு PE இருக்கிறது. இது போக ஒரு துறை சார்ந்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு PE இருக்கிறது. அப்புறம் காளைச்சந்தை PE. கரடிச்சந்தை PE. Forward PE என்று சொல்லப்படும் முன்னோக்கு PE. பின்னோக்கு PE. வரலாற்று PE (Historic PE) முதலீட்டாளர்களின் தலை சுழன்றடிக்க இந்த PE விகிதம் மட்டுமே போதுமானது. எனில் எந்த PE ல் கவனம் கொள்வது? வாருங்கள், பார்க்கலாம். ஒரு பங்கு 100 ரூபாய்க்கு வர்த்தகமாகலாம். அல்லது 10000 ரூபாய்க்கு வர்த்தகமாகலாம். 100 ரூபாய் மலிவு என்றோ 10000 ரூபாய் உயர்வு என்றோ நாம...

சுற்று வழி

சுற்று வழி  Obliquity  1. You can only swing well when you can swing without thinking about it- Bob Rotella ஆட்டத்தைக் குறித்து சிந்திக்காமல் ஆடும் போது மட்டுமே சிறப்பாக ஆட முடியும். 2. Oblique approaches often step backward to move forward. சுற்று வழிமுறைகளில், முன்னோக்கிச் செல்ல சமயங்களில் பின்னோக்கிச் செல்ல வேண்டும். 3. Happiness is not a goal; it is a by-product - Eleanor Roosevelt மகிழ்ச்சி என்பது ஒரு இலக்கல்ல. அது ஒரு துணை விளைபொருள். 4. Sometimes in life you never quite know what you are looking for until you find it. சில நேரங்களில் வாழ்க்கையில் நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பது அதைக் கண்டுபிடிக்கும் வரை உங்களுக்குத் தெரியாது. 5. Don't try to master the market. Master yourself. சந்தையில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்காதீர்கள். உங்களை நீங்களே ஆதிக்கம் செய்யுங்கள். 6. The best way to teach your kids about money is to make them feel the power of its scarcity- Margon Housel பணத்தைப் பற்றி உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கான சிறந்த வழி, அதன் பற்றாக்குறையின் சக்தியை அவர்களுக...

பரஸ்பர நிதி கேள்வி பதில்- 2

பரஸ்பர நிதி கேள்வி பதில்- 2 கேள்வி: பரஸ்பர நிதி முதலீடுகள் ஆறிய கஞ்சியைக் குடிப்பது போல உள்ளது? பதில்: முதலீடுகள் என்பவை கேளிக்கைகளோ அல்லது சாகச நடவடிக்கைகளோ அல்ல. அது புல் முளைப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது அல்லது பூச்சு உலர்வதற்காகக் காத்துக் கொண்டிருப்பது போன்றதாகும். ஆக, ஆறிய கஞ்சி நல்லது. கேள்வி: பங்கு முதலீடுகளுக்கு எங்கு பயிற்சி எடுக்கலாம்? பதில்: பங்கு முதலீடுகளுக்கான Net practice என்ற வகையில் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். கேள்வி: Rupee cost averaging, Value averaging என்ன வேறுபாடு? பதில்: பண சராசரி என்பது குறிப்பிட்ட அளவு பணத்தைக் குறிப்பிட்ட கால அளவில் முதலீடு செய்வது. மதிப்பு சராசரி என்பது சந்தையின் போக்கிற்கு ஏற்ப, சந்தை காளைத்தனமாக இருந்தால் குறைந்த அளவிலான பணம், சந்தை கரடித்தனமாக இருந்தால் அதிக அளவிலான பணம் என்ற வகையில் குறிப்பிட்ட கால அளவில் முதலீடு செய்வது. பண சராசரியை விட மதிப்பு சராசரி கொஞ்சம் கூடுதல் வருமானத்தைத் தருவதாக இருக்கும். அதற்காகக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். கேள்வி: பரஸ்பர நிதிகள் பன்மடங்காளர் ஆகுமா? பதில்: எத்தனையோ பரஸ்பர நிதித் திட்டங்களின் ...

மந்தை மனப்பான்மை

மந்தை மனப்பான்மை Herd Mentality  மனிதர்கள் தனிப்பட்டு சிந்திக்காமல் மந்தை மனப்பான்மையில் முடிவுகளை எடுப்பது மந்தை மனப்பான்மை (Herd Mentality) என்பதாக அழைக்கப்படுகிறது.  நம் மூதாதையர்கள் முன்பொரு காலத்தில் கூட்டம் கூட்டமாகக் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் எந்த முடிவுகளையும் கூட்டமாகச் சேர்ந்து தான் எடுப்பார்கள். எந்த இடத்திற்கு வேட்டையாடச் செல்வது என்பதில் தொடங்கி அவர்களது கூட்டத்தில் புதிதாக ஒருவரை இணைத்துக் கொள்வது வரை அனைத்து முடிவுகளும் கூட்டு அளவில் மட்டுமே எடுக்கப்படும்.  இப்போது நாம் அந்தக் கற்காலத்திலிருந்து பயணித்து எவ்வளவோ தூரம் வந்து விட்டோம். இப்போது நாம் வேட்டையாடச் செல்வதில்லை. பல்வேறு நாடுகளுக்கு அவற்றின் பற்பல இடங்களுக்குச் சுற்றுலா செல்கிறோம். சமூக ஊடகங்களில் யாரை நமது நண்பர்களாகச் சேர்த்துக் கொள்வது என்பது இப்போது நம் கையில் (விரலில்) உள்ளது. இருந்தாலும் சில இடங்களில் நாம் இன்னமும் அந்தக் கற்கால மனிதன் போலவே நடந்து கொள்கிறோம். அவற்றில் மிக முக்கியமான ஒரு இடமாகப் பங்குச்சந்தையைக் குறிப்பிடலாம்.  பங்குச்சந்தையில் அவ்வப்போது குமிழிகள் தோன்றி...

Keynes- மணி மொழிகள்- ஒரு எளிய விளக்கம்

Keynes- மணி மொழிகள்- ஒரு எளிய விளக்கம் 1. Successful investing is anticipating the anticipation of others. வெற்றிகரமான முதலீடு என்பது மற்றவர்களின் முன் உணர்வை முன் உணர்வது. முன் உணர்வு என்பது புரிகிறது. அதென்ன முன் உணர்வின் முன் உணர்வு? Keynes இதனைப் பின்வருமாறு விளக்குகிறார்: அழகிப் போட்டி ஒன்று நடைபெறுகிறது. நடுவர்களாக நாலைந்து பேர் இருக்கிறார்கள். அந்தப் போட்டியில் யார் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்பதை உங்கள் பார்வையில் கணிப்பது முன் உணர்வு. மற்ற நடுவர்களின் பார்வையில் யார் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது, இதில் பெரும்பான்மை வாக்குகள் யாருக்குக் கிடைக்கும் என்று கணிப்பது முன் உணர்வின் முன் உணர்வு. பங்குச்சந்தையைப் பொறுத்தவரை இந்த முன் உணர்வின் முன் உணர்வு தான் முக்கியமானது. பங்குகளுக்கான அழகிப்போட்டியில் எந்தப் பங்குகள் வெற்றி பெறும் என்பதான முன் உணர்தல் அது. 2. Markets can remain irrational longer than you can remain solvent. நீங்கள் திவால் நிலையை அடையும் காலத்தை விட அதிக காலம் சந்தை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு இருக்கும். நிறுவனப்பங்கு ஒன்று மிகை விலை-வருவாய் விகிதத்தில் வர்த்தகமாக...