Posts

Showing posts from September, 2024

சந்தை உச்சத்தில் முதலீடு செய்வது எப்படி?

சந்தை உச்சத்தில் முதலீடு செய்வது எப்படி ? How to invest at all time high markets ? 85000 புள்ளிகள் என்பது சென்செக்ஸ் பயணத்தின் ஒரு மைல்கல் மட்டுமே . அது பயணத்தின் இலக்கு அல்ல .  சென்செக்ஸ் என்பது அதன் 30 நிறுவனங்களை மட்டுமே சார்ந்தது . நிஃப்டி என்பது அதன் 50 நிறுவனங்களைச் சார்ந்தது . சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டு நிறுவனங்கள் உயர் மதிப்பீட்டில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தாலும் இந்தக் குறியீட்டிற்கு அப்பால் எத்தனையோ நிறுவனப்பங்குகள் மதிப்பு முதலீடாக , குறை மதிப்பீட்டில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கலாம் . அந்த வகையில் காளைச் சந்தைக்குள் ஒரு கரடிச் சந்தையும்  இயங்கிக் கொண்டிருக்கிறது . மேலும் , தரமான நிறுவனங்கள் தற்காலிகமான பிரச்னைகளில் சிக்கித் தவிக்கையில் அவற்றைக் குறை மதிப்பில் வாங்குவதற்கான வாய்ப்பு எப்போதும் திறந்த நிலையில் உள்ளது . வாரன் பஃபெட் owner mentality என்று குறிப்பிடும் உடைமை மனப்பான்மை குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம் . இப்போது பங்குச்சந்தை அதன் உச்சபட்ச அளவுகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது . சென்செக்ஸ் குறியீட்டில் 13 சதம் இடம் பிடித்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவ...

பங்குச்சந்தை பதில்கள் - 12

பங்குச்சந்தை பதில்கள் - 12 கேள்வி : வாரன் பஃபெட்டின் முதலீட்டு வெற்றிக்கு அடிப்படையான காரணம் என்ன ? பதில் : 11 வயதில் ஆரம்பித்த அவரின் அறிவின் கூட்டுப்பெருக்கம் . கேள்வி : காப்பீடு , இல்லாத பணத்தை உருவாக்குகிறது தானே ? பதில் : ஆனால் அதனைப் பெற நாம் இல்லாது போக வேண்டுமே ! கேள்வி : எந்தப் பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் கோடிகளை அள்ள முடியும் ? பதில் : எந்தப் பரஸ்பர நிதியும் உங்களைக் கோடீஸ்வரர் ஆக்காது . நீங்கள் தான் உங்கள் உணர்வுகளை பரஸ்பரம் மேலாண்மை செய்து கோடிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் . கேள்வி : Short selling மூலமாகப் பணம் ஈட்டுவது தவறு தானே ?  பதில் : கெட்டதை சங்கு ஊதி அறிவிப்பது சரி தானே ? கேள்வி : பங்குச்சந்தையில் வெற்றி பெறுவதற்கான உத்தியை ஒரே வரியில் சொல்ல முடியுமா ? பதில் : காளைச்சந்தையில் கரடியாக இருங்கள் , கரடிச்சந்தையில் காளையாக இருங்கள் . கேள்வி : பங்குச்சந்தையில் விரைவாகப் பணம் ஈட்டுவதற்கான வழி என்ன ? பதில் : மெதுவாகச் செல்வது . கேள்வி : குறியீட்டு நிதிகளில் முதலீடு செய்வதை விட குறியீட்டுப் பங்குகளைத் தனிப்பட்ட முறையில் நாமே ஏன் வாங்கக்கூடாது ? பதில்...

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தை எவ்விதம் எதிர்கொள்வது ?

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தை எவ்விதம் எதிர் கொள்வது ? பங்குச்சந்தையில் , அதில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் ஏற்ற இறக்கங்களில் கவனம் கொள்ளாமல் இருப்பது இந்த ஏற்ற இறக்கங்களை வெற்றி கொள்வதற்கான உன்னதமான ஒரு வழிமுறையாகும் . நிறுவனப் பங்கு ஒன்றை உதாரணமாகக் கொண்டு இதனைப் புரிந்து கொள்ளலாம் . நான் 2008 ஆம் ஆண்டு 2100 ரூபாய்க்கு வாங்கிய ஐம்பது V Guard நிறுவனப்பங்குகளுக்கான பங்காதாயப் பட்டியல் ... ஆண்டு - பங்காதாயம் - பங்கு ஈட்டு விகிதம் Year - Dividend - Dividend Yield  2008 - Rs.125 - 5.95 % 2009 - Rs.125 - 5.95 % 2010 - Rs.150 - 7.14 % 2011 - Rs.175 - 8.33 % 2012 - Rs.175 - 8.33 % 2013 - Rs.175 - 8.33 % 2014 - Rs.225 - 10.71 % 2015 - Rs.225 - 10.71 % 2016 - Rs.350 - 16.66 % 2017 - Rs.350 - 16.66 % 2018 - Rs.490 - 23.33 % 2019 - Rs.560 - 26.66 % 2020 - Rs.630 - 30 % 2021 - Rs.840 - 40 % 2022 - Rs.910 - 43.33 % 2023 - Rs.910 - 43.33 % 2024 - Rs.980 - 46.66 % பங்காதாயம் ஒரே சீராக உயர்ந்து வரும் பாங்கைக் கவனியுங்கள் . நாளும் ஏறி இறங்கும் பங்கின் விலை வெறும் இரைச்சல் (noise) ஒரே சீராக உயர்ந்...

அதிர்ஷ்டத்திற்குத் திட்டமிடுவது எப்படி ?

அதிர்ஷ்டத்திற்குத் திட்டமிடுவது எப்படி ? How to get lucky என்ற புத்தகத்தில் Max Gunther எடுத்துரைக்கும் ஒரு கருத்தாக்கம் : அதிர்ஷ்டம் வேறு , திட்டமிடல் வேறு . அதிர்ஷ்டத்தைத் திட்டமிடல் என்று கொள்வது ஆபத்தை விளைவிக்கும் . இந்தக் கருத்தைச் சிறிய ஒரு உண்மைக்கதையின் மூலம் அவர் விளக்குகிறார் . சூதாட்ட வட்டில் (Roulette wheel) பணம் கட்டி வெற்றி பெற பெண்மணி ஒருவர் ஒருங்கமைவு (system) ஒன்றைக் கண்டறிகிறார் . அது என்னவென்றால் , சூதாட்ட வட்டு குறிப்பிட்ட ஒரு எண்ணில் நிற்கும் என்பதாகப் பந்தயம் கட்டுகையில் பந்தயத்தில் தோற்றால் பந்தயப் பணத்தை இரட்டிப்பாக்கி அதே எண்ணில் மீண்டும் கட்டுவது . தோற்றால் மீண்டும் ... இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் இழந்த பணத்தை மட்டுமின்றி பெரும் பணத்தையும் ஒரு கட்டத்தில் சம்பாதித்து விடலாம் . இந்த ஒருங்கமைவைக் கொண்டு முதல் நாள் அந்தப் பெண்மணி சூதாட்டத்தில் வெற்றி பெறுகிறார் . மறுநாளும் வெற்றி . மூன்றாம் நாள் ஆகப்பெரிய அளவிலான பணத்தைப் பந்தயமாகக் கட்டி அதைத் தொடர்ந்து இரட்டிப்பாக்க முனைகையில் ஒருங்கமைவு வேலை செய்யவில்லை . என்னவாயிற்று ஒருங்கமைவுக்கு ?  சூதாட்ட...