Posts

Showing posts from May, 2022

இலவசம் இலவசமா ?

இலவசம் இலவசமா ? பங்குச்சந்தையில் இலவசம் இலவசம் அல்ல . ஆனால் இலவசம் இலவசம் . குறுகிய கால அளவில் இலவசம் இலவசம் அல்ல . நீண்ட கால அளவில் இலவசம் இலவசம் . நிறுவனங்கள் அவ்வப்போது  1:1 , 1:2 , 2:1 என்ற பல்வேறு விகிதங்களில் இலவசப் பங்குகளை ( Bonus Shares ) அளிப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் . இந்தப் பங்குகள் உண்மையிலேயே இலவசம் தானா ? அவ்வாறு இல்லையென்றால் அடிப்படையில் இவை என்ன ? முதலில் இந்த இலவச விகிதங்களைப் பார்க்கலாம் . 1:1 என்றால் ஏற்கெனவே உள்ள ஒரு பழைய பங்குக்கு ஒரு புதிய பங்கு என்று பொருள் . 1:2 என்றால் ஏற்கெனவே உள்ள பழைய இரண்டு பங்குகளுக்கு ஒரு புதிய பங்கு . 2:1 என்றால் ஏற்கெனவே உள்ள பழைய ஒரு பங்குக்கு இரண்டு புதிய பங்குகள் . இந்த விகிதத்தில் முதலில் குறிப்பிடப்படும் எண் நிறுவனம் வழங்கவிருக்கும் புதிய பங்குகள் . இரண்டாவதாக குறிப்பிடப்படும் எண் ஏற்கெனவே உள்ள பங்குகள் . நிறுவனம் ஒன்றின் பங்கு முதல் (Equity capital) 10 கோடி என்று கொள்ளலாம் . அதன் இருப்பு மற்றும் உபரி ( Reserves & Surplus) 500 கோடி . நிறுவனம் அதன் பங்கு முதல் மாதிரி 50 மடங்கு பணத்தை உபரியாக வைத்திருக்கிறது ...

ஜென் கதைகள் - 3

ஜென் கதைகள் - 3 1. நிறைகுடம் ஒரு சமயம் ஜென் குரு நடத்தும் மதிப்பு முதலீட்டுத் தேர்வு எழுத மூன்று முதலீட்டாளர்கள் சென்றனர் . செல்லும் வழியில் அடுமனை (bakery) ஒன்று இருந்தது . மூவரும் கேக் உண்ணும் பொருட்டு அந்த அடுமனை வாசலில் நின்று கொண்டிருக்கும் போது இருவர் பாடங்களைக் குறித்துக் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர் . ஒருவர் அமைதியின் வடிவாக இருந்தார் . அந்த அடுமனை ஆயா மூவரும் எங்கு செல்கிறீர்கள் என்பதாகக் கேட்டார் . நண்பர்கள் இந்த மாதிரி தேர்வு எழுதச் செல்வதாகக் கூறினர் . ஆயா , அமைதியாக அமர்ந்திருப்பவரைச் சுட்டிக் காட்டி அவர் மட்டும் தான் தேர்வில் வெற்றி பெறுவார் என்று சொன்னதை நண்பர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . ஆனால் , அவர்கள் ஆச்சரியப்படும் விதமாக ஆயா குறிப்பிட்டவர் மட்டும் தேர்வில் வெற்றியடைந்தார் . நண்பர்கள் திரும்பி வரும் போது ஆயாவிடம் உனக்கு எதிர்காலத்தில் நடக்க இருப்பதைக் கூறும் திறன் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டனர் ‌. அடுமனை ஆயா சொன்னது : கேக் பதமாவதற்கு முன்னர் சத்தம் போடும் . பதமாகி விட்டால் சத்தம் போடாது . 2. அப்பன் போனான் ... உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்...

வேதாளம் சொன்ன கதை - 3

வேதாளம் சொன்ன கதை - 3 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான் . பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமாதித்தனை நோக்கி , 'மன்னா !  விடாமுயற்சி உடனான உன் நீடிப்புத்திறனை நான் பாராட்டுகிறேன் . பங்குச்சந்தையில் வெற்றி பெற இந்த நீடிப்புத்திறன் தலையாயது . ஒரு ஊரில் வடிகட்டிய முட்டாள் ஒருவன் இருந்தான் . கல்விக்கும் அவனுக்கும் காத தூரம் . ஒரு நாள் காட்டு வழியாக அவன் நடந்து சென்று கொண்டிருக்கையில் தேவதை ஒன்று அவன் முன்னால் தோன்றி அவனுக்கு இரண்டு வரங்கள் அளிப்பதாகக் கூறியது . அவன் உடனே எனக்கு ஒரு கோப்பை மது வேண்டும் என்று கூறினான் . மதுக் கோப்பையை அளித்த தேவதை இது மிகவும் அபூர்வமான கோப்பையாகும் . நீ நினைக்கும் போதெல்லாம் இந்தக் கோப்பை மதுவைத் தரவல்லது . இன்னொரு வரத்தையும் கேட்டு வாங்கிக்கொள் என்றது . அந்த முட்டாள் கேட்டது : எனக்கு இதே போல இன்னொரு மதுக் கோப்பை வேண்டும். கல்வியறிவற்றவன் தனக்குக் கிடைக்கப்பெறும் வரங்களைக் கூட இவ்வாறு சாபங்களாக மாற்றிக் கொ...

ஆர்வ மோதல்

ஆர்வ மோதல் Conflict of Interest ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது டெல்லியில் இராஜ நாகங்களின் தொல்லை அதிகமாக இருந்தது . பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள் . அதுவும் இராஜ நாகம் என்றால் கேட்கவா வேண்டும் ? ஆங்கிலேய அரசாங்கம் இராஜ நாகத்தைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசளிக்கப்படும் என்பதாக முடிவெடுத்தது . நம்மவர்கள் தெருவில் திரியும் இராஜ நாகங்களைப் பிடித்துக் கொடுத்து பரிசுகளை வாங்கிய வண்ணம் இருந்தனர் . ஒரு கட்டத்தில் நாட்டில் பிடித்துக் கொடுக்கப் பாம்பு எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்ட பின்னர் நம்மவர்கள் காட்டிற்குச் சென்று பாம்புகளைப் பிடித்து வந்து ஆங்கிலேய அரசாங்கத்திடம் கொடுத்துப் பரிசுகளைப் பெறத் தொடங்கினர் . அரசாங்கம் இதனைக் கண்டறிந்து இந்தப் பாம்புப் பரிசுத் திட்டத்தைத் தடை செய்து விட்டது . அரசாங்கத்திற்கும் மக்களுக்குமான இந்த ஆர்வ மோதலின் கதை சுபமாக முடியவில்லை . நம்மவர்கள் எஞ்சிய பாம்புகளை நடுத்தெருவில் விட்டு விட்டுச் சென்று விட்டனர் . இப்போது டெல்லி நகர வீதிகளில் இந்தப் பரிசுத் திட்டத்திற்கு முன்னர் இருந்த பாம்புகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு பாம்புகள் சுற்றி...